search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corono virus"

    • சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
    • பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

    புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.

    ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.

    பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவி வருகிறது.
    புவனேஷ்வர்:

    இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையிலும் பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

    ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம், கெந்துஜார் மாவட்டம், சமக்பூர் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மயூர்பஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ரூபவானு மிஸ்ரா கூறுகையில், “மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளது. பள்ளியில் நிலைமையும் கட்டுக்குள் உள்ளது. மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார். 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×