என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கண்காணிப்பு கேமராவில் குழந்தையை ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.
    • விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றவர்கள் இருவரும் சோனியாவின் உறவினர்கள் என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு லட்சயா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ஆதித்யா என்ற 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    சோனியா புதுச்சேரி கடற்கரையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவில் வியாபாரத்தை முடித்த விட்டு மிஷன் வீதிக்கு நடந்து வந்துள்ளார்.

    அங்கு ஒரு கடையின் முன்பு பிளாட்பாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். பின்னர் அசதியில் அவர் குழந்தைகளுடன் பிளாட்பாரத்திலேயே தூங்கிவிட்டார்.

    நள்ளிரவு திடீரென்று கண்விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த குழந்தையை ஒரு தம்பதி கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியர் புனிதா (31), பசவராஜ் (32) என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

    சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த சில மாதத்துக்கு முன்பு புனிதா கர்ப்பமானார். இந்த நிலையில் திடீரென புனிதாவுக்கு கரு கலைந்தது.

    இதனை கணவனிடம் கூறி புனிதா வருத்தப்பட்டார். மாமியார் உள்பட கணவன் வீட்டினர் ஏளனமாக பேசுவார்களே என்று பயந்துபோன புனிதா தனது கணவரிடம் வேறு எங்காவது குழந்தையை கடத்தி வந்து தனக்கு பிறந்ததாக கூறலாம் என யோசனை தெரிவித்தார்.

    அதற்கு பசவராஜ் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டிற்கு செல்வதாக புனிதா தனது மாமியாரிடம் கூறிவிட்டு கணவருடன் புதுவை வந்தார்.

    அவர்கள் இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து முகாமிட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு சரியான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து புதுவை கடற்கரைக்கு வந்தபோது அங்கு சோனியா கைக்குழந்தையுடன் பொம்மை விற்பதை பார்த்து உள்ளனர்.

    குழந்தை அழகாக இருந்ததால் அதனை கடத்தி செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்திற்கு புனிதாவின் சகோதரரான புவனகிரியை சேர்ந்த ராஜ்கணேஷ் (30) உதவி செய்வதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பல நாட்களாக அவர்கள் சோனியா இரவு நேரத்தில் குழந்தையுடன் எங்கு செல்கிறார் என்பதை நோட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு மிஷன் வீதி கடை முன்பு பிளாட்பாரத்தில் குழந்தையுடன் சோனியா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழந்தையை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து குழந்தை கடத்தலுக்கு உதவிய புனிதாவின் சகோதரர் ராஜ்கணேசையும் போலீசார் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட குழந்தையை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • கோரிக்கையை வலியுறுத்தி மாபரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    • மாநில செயலாளர் சலீம், ஐ.என்.டி.யூ.சி. அபிஷேகம், தினேஷ்பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட வில்லை.

    இந்த சம்பளத்தை வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தனித்தனியே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடலில் இறங்கி போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம் உட்பட பல போராட்டங் களை நடத்தினர். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பளம் வழங்கவில்லை.

    இதையடுத்து புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்தனர். கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு புதுவை சுதேசி மில் அருகே நடத்தப் பட்டது.

    இதில் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை யோடு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாபரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை பேரணி நடந்தது. இதற்காக அனைத்து அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் அண்ணா சிலை அருகே திரண்டனர். கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாசிக் சங்கம் முத்துராமன், ரமேஷ், தரணிராஜன், பாப்ஸ்கோ சங்கம் ரமேஷ், ஜெய்சங்கர், பிரபு, விற்பனைக்குழு துரை செல்வம், பாஸ்கர பாண்டியன், சண்முகம் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டசபை அருகே ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு தி.மு.க. சம்பத் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஐ.என்.டி.யூ.சி. அபிஷேகம், தினேஷ்பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

    இதன்பின்னர் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். தொழிலாளர்கள் பேரணியையொட்டி புதுவை சட்டசபை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சட்ட சபையின் முன்புற பகுதியில் பேரிகார்டு அமைத்து, கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • டெல்லி மாநாட்டில் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
    • புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் தேசிய உணவுத்துறை மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்று பேசிய புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள பிராந்தியங்கள் ஆகும். தமிழகம், கேரளா,ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.

    இது புதுச்சேரி பிராந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாம் பா.ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் வழங்கிய தேர்தல் வாக்குறு திகளில் பொதுமக்களுக்கு நேரடியாக அரிசி வழங்குவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் தற்போது அரிசி வழங்காமல் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

    • நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • புதுவையில் ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி கடனுக்கு வட்டி, அபராத வட்டி செலுத்துகிறோம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ. நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தா ராமன் நாளை வருகிறார். முதல்- அமைச்சர், அமைச்சர்க ளோடு கலந்து பேசி கோரிக்கைகளை வலியுறுத்துவது தொடர்பாக பேசியுள்ளார்.

    அதோடு, புதுவையை நிதிக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தொகையாக ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 450 கோடி வழங்குகிறோம்.

    இதை டெல்லி அரசு வழங்குவது போல கூட்டணி யில் உள்ள மத்திய அரசே நேரடியாக வழங்க வேண்டும். இதனால் மிச்ச மாக கிடைக்கும் நிதியின் மூலம் புதுவையில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். பொது கணக்கு தொடங்கும்போது இருந்த கடனை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு செய்யாததால் கடன் தொகை அதிகரித்துள்ளது. இந்த கடன்தொகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். புதுவையில் ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி கடனுக்கு வட்டி, அபராத வட்டி செலுத்துகி றோம். இந்த வட்டி, அபராத வட்டிக்கு 5 ஆண்டு சலுகை பெற வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி பெற வேண்டும்.

    புதுவை மாநிலத்துக்கு வழங்கப் படும் நிதி குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். ஏன் திட்டங்க ளுக்கு நிதியை செலவிட வில்லை? இதற்கு காரணம் யார்? திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரி கள் யார்? என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்கும் நிதியை முழுமையாக செலவிட மத்திய மந்திரி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை
    • அதிகாரிகள் ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் புதிய சிக்கல்களை மீண்டும் உருவாக்கித் தருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாரி, கவுரவ தலைவர் சேஷாசலம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் ஆசிரியர்க ளுக்கான சரியான மாற்றல் உத்தரவு கொள்கை இதுவரை எதுவும் இல்லை. காலியாக உள்ள பணியி டங்களை ஆண்டுதோறும் நிரப்பாததால் 900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    கல்வித்துறையின் அலட்சியப்போக்கும் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கும்தான் ஆசிரியர்களுக்கு இக்கட்டான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.

    எந்த ஆசிரியரும் காரைக் கால் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றா மல் நகர்புறங்களில் பணியாற்றுவதில்லை. புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள் மூலம் கிராமப் புறங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் பணி அமர்த்தப்படுகின்றனர். இவ்விடங்களில் பணி செய்த பின்னர்தான் சீனியர் ஆசிரியர்கள் என்ற முறையில் நகர்புறங்களில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

    ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் பணி செய்யாதது போலும், காரைக்கால் மாவட்டத்தில் பணி செய்யாதது போலும் சில சமூக அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஆசிரியர்கள் மீதான தவறான கருத்துக்களைத் திணித்து சித்தரிக்கின்றனர். அதிகாரிகள் ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் புதிய சிக்கல்களை மீண்டும் உருவாக்கித் தருகின்றனர்.

    ஏற்கனவே வெளிவந்த 2 அரசாங்க ஆணையை தவிர்த்து புதிதாக வழிகாட்டு நெறிமுறை என்ற பெயரில் சுற்றறிக்கை தயார் செய்து ஆசிரியர்களுக்கு எதிர்ப்பான செயலை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதை எதிர்த்துத்தான் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் தற்போது போராடி வருகின்றனர் என்பது உண்மை.

    அவசர கால வழிகாட்டு நெறிமுறை சுற்றிக்கையை விட்டுவிட்டு சரியான வெளிப்படையான சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முன் வர வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் அவசரகால முறையில் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்பி ஆசிரியர்கள் இடமாறுதல் கொள்கைக்கு அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • வீ.விஜய் (என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி எந்திரத்தை, ஏமாற்றி கடத்திசென்ற நபரை, ஒரு வருடத்திற்கு பிறகு திருநள்ளாறு போலீசார் கைது செய்து, ஜே.சி.பி எந்திரம் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டையை சேர்ந்தவர் த.விஜய். இவரது ஜே.சி.பி எந்திரத்தை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச்சேர்ந்த வீ.விஜய் (வயது35) என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்துசென்றுள்ளார்.

    ஒரு சில மாதங்கள் வாடகையை முறைப்படி வழங்கிய வீ.விஜய், அடுத்த சில மாதங்களாக வாடகையை தரவில்லை. மேலும், ஜே.சி.பி எந்திரம் எங்குள்ளது என்ற விவரத்தையும் கூற மறுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட த.விஜய், தனது ஜே.சி.பி. எந்திரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த மார்ச் 2023ல், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, வீ.விஜயை தேடிவந்தனர். இந்நிலையில், வீ.விஜய் வாடகைக்கு எடுத்த ஜே.சி.பி எந்திரத்தை, தனது நண்பர் பாருக்கிடம் விற்றது தெரிவந்தது. தொடர்ந்து, சீர்காழியில் பாருக்கை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், வீ.விஜயை போலீசார் கைது செய்து, ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.
    • கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச் சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10, 15, ஆண்டுகளாகவே புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையாக குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுவதில்லை. அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.

    ஒரு செமஸ்டர் என்பது 5 மாத காலத்திற்கானது. அது பெரும்பாலும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலும் கணக்கெடுக்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட வேண்டும்.

    இந்தக்கால வரையறை எந்தக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் கல்லூரிகள் திறக்கும் தேதியும், மூடும் தேதியும் முடிவெடுப்பது பல்கலைக்கழகமே.

    எனவே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரி அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.

    ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கான இந்தக் கல்வி ஆண்டு மே மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் எதுவும் நடைபெற வில்லை. பல கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் இன்னும் தேர்வுக் கட்டணம் கூட செலுத்தாமல் உள்ளனர்.

    அதற்கான அறிவிப்பை மிக மிகத் தாமதமாகவே பல்கலைக் கழகம் வெளியிட்டது. காலம் கடந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில பாடங்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் விளைவாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் பாதிப்படைகின்றனர்.

    எனவே கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.
    • பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட முஸ்லீம் கல்லரை வீதியில் உள்ள வேதவள்ளி அம்மன் கோவில் மற்றும் நேதாஜி நகரில் உள்ள பாலமுருகன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இக்கோவில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளிக்குமாறு கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்து அறநிலைத்துறை மூலம் 2 கோவில்களுக்கும் தலா ரூ .1 3/4 லட்சம் நிதிக்கான காசோலையை கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜி, தி.மு.க. பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    • மோசடி தகவல்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

    தற்போது மோசடி கும்பல் மின்துறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

    புதுவையில் பலருக்கும் மின்துறை பெயரில் குறுஞ்செய்தி வருகிறது. அதில் உங்கள் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தா ததால் இரவு 9.30 மணிக்குள் இணைப்பு துண்டிக்கப்படும். உடனடியாக மின்துறை அதிகாரியை தொடர்புகொள்ளவும் என தகவலுடன் ஒரு செல்போன் எண் இடம்பெறுகிறது.

    இதை பார்த்த பயந்தவர்கள் மோசடிக்காரர்களை தொடர்புகொண்டு பணத்தை இழந்து ஏமாறுகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி தகவல்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேயர் ராமலிங்கக் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், தியாகிகள் உருவச் சிலை திறப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய கட்டிடத்தையும், சிலைகளையும் திறந்து வைத்து பேசினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம். ஆகவே தலைவர்களது தியாகத்தை இளந்தலைமுறையினருக்கு கற்பிக்கவேண்டும்.

    சுதந்திரப் போராட்டத் தியாகிகளது சிலைகளை பள்ளிக்கூடங்கள் போன்ற வற்றில் அமைப்பதும், அச்சிலைகளது அடியில் அவர்களது கருத்துள்ள வாசகங்களை பொறிப்பதும் அவர்களது தியாகத்தை நினைவுகூறுவதாக அமைகிறது. அவர்களது பெயர்களையும் நாம் முக்கிய இடங்களுக்கு சூட்டுவதும் தியாகத்தை இளந்தலைமுறையினர் நினைவு கூர்வதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிறைவேற்றும்

    அறிவித்த எல்லா திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். பொது மக்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். குறிப்பாக மாணவர்க ளுக்கு அறிவித்த திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப் படும். இந்தியா சார்பில் சர்வதேச போட்டியில் பங்கேற்று புதுவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு விரைவில் உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். உடல் ஆரோக்கியத்துக்கு பிள்ளைகள் விளை யாட்டி லும் ஆர்வம் காட்ட வேண்டும்.

    புதுவையில் எளிதாக கிடைக்கும் கல்வியை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசின் உதவியோடு புது வையை சிறந்த முறையில் முன்னேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் பேசும் போது சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் எந்தெந்த பள்ளிகளில் சூட்டப்பட்டுள்ளதோ அங்கு அவர்களின் சிலைகள் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சம்பந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் வரவேற்றார். முடிவில் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • 15 நாள்துாய்மை பணி திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண் டாடப்படுகிறது.
    • கருங்கல் குவியல்களுக்கு குவிந்து கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி மற்றும் கட லுார் தேசிய புள்ளியியல் அலுவலகம் துணை மண்டலங்கள் சார்பில், 15 நாள்துாய்மை பணி திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதனையொட்டி புதுச் சேரி கடற்கரையில் சிறப்பு துப்புரவு முகாம் நடந்தது.

    முகாமை புதுச்சேரி துணை மண்டல உதவி இயக்குநர் முத்துச்சாமி தொடங்கி வைத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடினார்.

    தொடர்ந்து கடற்கரையில் கருங்கல் குவியல்களுக்கு குவிந்து கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    முகாமில் புதுச்சேரி, கடலுார் தேசிய புள்ளியியல் அலுவலக துணை மண்டல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×