என் மலர்tooltip icon

    வேலூர்

    • பொருட்களை திருடி சென்றுள்ளனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது காலபைரவர் கோவில். இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். கோவிலில் உள்ள உண்டியல் மட்டும் பீரோக்களை உடைத்து, அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஏரிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் அணை க்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தக் கோவிலில் இதே போல் ஏற்கனவே ஒரு முறை திருட்டு சம்பவம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • லாக்கரை உடைக்க முடியாததால் விபூதி குங்குமம் தூவி சென்றனர்
    • கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்குள்ள ஒரு பீரோவை உடைத்து அதனை திறந்தனர்.

    அதில் நகை பணம் எதுவும் இல்லை. மற்றொரு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் தங்களுடைய கைரேகை பதிவு ஆகாமல் இருக்க தாங்கள் கொண்டு வந்த விபூதி குங்குமம் ஆகியவற்றை அலுவலகம் முழுவதும் தூவி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலையில் நிதி நிறுவனத்தை திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவு ஆகியிரு ப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் விபூதி குங்குமத்தை வீசி சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்
    • 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு

    வேலூர்:

    இந்துக்களின் முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இன்று அதிகாலை முதல் முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விநாயகருக்கு உகந்த பொருளான அருகம்புல், எருக்கன் பூ மாலை, கம்பு, சோளம், நவதானியம், கொழுக்கட்டை மற்றும் பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடைவீதிகளில் களிமண் விநாயகர் சிலைகள், அருகம்புல், எருக்கன்பூ மாலை, குடை மற்றும் பழ வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 1,200 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி 3-ம் நாளான நாளை மறுதினம் 20-ந் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்காக 7 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 749 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மறுநாள் 20-ந் தேதி வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், அன்றைய மறுநாள் 21-ந் தேதி ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூர் ஆணை மடுகு தடுப்பணை, திருப்பத்தூர் ஆதியூர்ஏரி, நாட்ரம்பள்ளி கல்லுகுட்டை ஏரி ஆகிய 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 252 இடங்களிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் 211 இடங்களில் என மொத்தம் 463 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
    • பூக்கள் விலை அதிகரிப்பு

    வேலூர்:

    விநாயகர் சதூர்த்தி வீடுகள் மட்டுமின்றி வீதிகளிலும், இந்து முன்னணி, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி விசுவ இந்து பரிஷத் என பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து பண்டிகை கோலாகலமாக கொண் டாடப்படுகிறது.

    இதற்காகமுக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதுடன், பல் வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வீதிகள் களைகட்டியுள்ளன. இதற்காக பல்வேறு வடிவங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களுடன், சித்தி விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், வீர விநாயகர், விஸ்வரூப விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விழா நடக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வ தையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். அதேபோல் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந் தது. விநாயகர் சிலைகள் மட்டுமின்றி பூஜைக்கு உரிய பூக்கள், பழங்கள், பூசணிக்காய் மற்றும் குடை உள்ளிட்ட பூஜை பொ ருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் வேலூர் கிருபானந்தவா ரியார் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ முல்லை ரூ.1700-க்கும், மல்லி ரூ.1000-க்கும், ஜாதிமல்லி ரூ.2500-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், சாமந்தி ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம்.
    • இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது.

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடைபெற்றது.

    முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கருணாநிதி கூறுவார். இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது. இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.

    மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.

    சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.
    • கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை தொடங்கியது.

    இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார்.

    அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பல்வேறு சிறப்புகளை கொண்ட, வீரம் விளைந்த வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வார்க்கப்பட்டவர்கள். முக்கிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை வழிநடத்துபவர் துரைமுருகன். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகள்.

    கொட்டும் மழையில் பிறந்ததால்தான் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுகவை வாழ வைத்துக் கொண்டிருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான்.

    ஒரு குடும்பத்தின் தாய், தந்தையை போன்றவர்கள்தான் கட்சியின் முன்னோடிகள். 2 கோடி கொள்கை வாதிகள் நிறைந்ததுதான் திமுக.

    பெரியாரும், அண்ணாவும் தத்துவத்தின் அடித்தளம். தென்மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றியவர் ஐ.பெரியசாமி. தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் வரி வருவாய்தான். நிதி ஆதாரங்கள் கிடைக்கவிடாமல் தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டு வந்தனர்.

    தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.

    மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை.

    மக்களை திசை திருப்ப பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர்.

    தேர்தல் வரும் நேரத்தில் கண்துடைப்பிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

    பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது என சிஏஜி அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வெற்றி நிலைநாட்ட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணி யம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீ சார் நேற்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்திவரப்பட்ட முரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலுதவி சிகிச்சை அளித்தனர்
    • காப்புக்காட்டில் விடப்பட்டது

    வள்ளிமலை:

    காட்பாடி தாலுகா வள்ளி மலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சி சின்னபெருமாள்குப் பம் பகுதியில் நேற்று காலை அருகில் உள்ள காப்புக்காட் டில் இருந்து புள்ளிமான் ஒன்று நீர் தேடி கிராமத்துக்குள் வந்துள்ளது.

    அப்போது புள்ளி மானை நாய்கள் துரத்தியது. இதனால் ஓடிய புள்ளிமான் அந்த கிராமத்தில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.

    இதனை கண்ட அப்பகுதியில் நிலத்தில் வேலை செய்திருந்த பெண்கள் இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இளைஞர்களும், கிராம மக்களும் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி புள்ளி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையை சேர்ந்த அரிகிருஷ் ணன், கருணா ஆகியோர் வந்து, புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அருகில் உள்ள காப்புக்காட் டில் புள்ளிமானை விட்டனர்.

    • வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    வேலூர்:

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார்.

    அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    இன்று காலை வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த மேல்மொணவூர் அப்துல்லாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றார்.

    அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் திடலுக்கு சென்றார். அங்கு பிரமாண்ட கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். தி.மு.க முப்பெரும் விழா இன்று மாலை பிரமாண்டமாக நடக்கிறது.

    இதில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம் நகரம் பகுதி பேரூர் ஆகியவற்றில் கட்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பண முடிப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

    விருது வழங்கும் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை கி.சத்திய சீலனுக்கும் அண்ணா விருதை கா.சுந்தரத்திற்கும், கலைஞர் விருதை ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருதை திருமதி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ந.இராமசாமிக்கும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

    விழாவில் அமைச்சர்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூரில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் அருகே உள்ள தனியார் ஓட்டல், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.
    • இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார்.

    வேலூர்:

    தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.

    இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் இன்று காலை நடந்தது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக்காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

    மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

    பின்னர் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். அப்போது குடியிருப்பில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் முகாம்களில் உள்ள வசதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பயனாளிகள் இதற்கு முன்பு சிரமத்துடன் வசித்து வந்தோம் குடியிருப்பு கட்டப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக உருக்கமாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி சாமி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காந்தி, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோவில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்கு வந்து அவரது உறவினரான புத்தூர் பகுதியை சேர்ந்த சிலை செய்யும் தொழிலாளி பிரபாகரன் (33) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, விருத்தம்பட்டு அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சத்யா (வயது 35). தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கணபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனை அடுத்து சத்யா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சத்யா நேற்று தனது வீட்டின் குளியல் அறையில், ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சத்யா உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் விரைந்து வந்து பரிசோதனை செய்தார். அப்போது, சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×