என் மலர்
நீங்கள் தேடியது "31 மில்லி மீட்டர் மழை"
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அறிவிப்பு
- அதிகபட்சமாக மோர்தானா அணைப்பகுதியில் 31 மில்லி மீட்டர் பதிவானது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.
இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மோர்தானா அணைப்பகுதியில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்து விழுந்தன.
காகிதப்பட்டறையில் உழவர் சந்தை அருகே சாலையோரம் இருந்த கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அதில் எச்சரிக்கை தடுப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை .இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காலையில் தொடர் மழை பெய்ததால் வேலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.
மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. பருவமழை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு
வேலூர் 17.3 ,குடியாத்தம் 2, அணைக்கட்டு 4, மோர் தானா அணை 31, கே. வி குப்பம் 4, காட்பாடி 5.2, பொன்னை 10.6, சத்துவாச்சாரி 8.7, பேரணாம்பட்டு 2.8.






