என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் ஆக்சிலியம் கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.கவினர் பேனர்களை அகற்றக்கோரி ஆக்சிலியம் கல்லூரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்சிலியம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் யாரும் சாலையோரங்களில் பேனர்களை வைக்க கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனாலும் காட்பாடியில் தி.மு.கவினர் ஆங்காங்கே பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, பேரவை ரவி, அணி செயலாளர்கள் ராக்கேஷ், அமர்நாத், சரவணன், தனசேகரன் பி.எஸ். பழனி மற்றும் வட்ட செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 801 ரேசன் கார்டுகள் உள்ளன. 4 லட்சத்து 43 ஆயிரத்து 375 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். இதுவரை 96.92 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் ராஜாராம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்.
ஆயிரம் காடுகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அவற்றை விரைவில் பிரித்து புதியதாக ரேசன் கடைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய கடைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு சரியாக திறக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பொருட்கள் தரமாக உள்ளதா சரியான அளவில் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.






