என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
Byமாலை மலர்21 Jan 2022 9:37 AM GMT (Updated: 21 Jan 2022 9:37 AM GMT)
ஊசூர் அருகே மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.
வேலூர்:
வேலூரை அடுத்த ஊசூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் திருவிழா நடந்தது. வேலூர் சப்-கலெக்டர் (பொறுப்பு) காமராஜ் தலைமை தாங்கினார்.
ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் அணிதாசிவக்குமார் வரவேற்றார். அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 70 மாடுகள் பங்கேற்றது. 1500 பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.
விழாவில் மாடுகள் முட்டியதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், எருதுவிடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X