search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.  சாலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
    X
    வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    வேலூர் சத்துவாச்சாரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று ஆய்வு செய்தார். 

    மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை கோர்ட்டு பின்புறம் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.

    குடியிருப்புகளை விட சாலைகள் மேடாக உள்ளதா? தாழ்வாக உள்ளதா? மழை நீர் வெளியேறும் கால்வாய் களும் அமைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார்.

    அப்போது சாலையோரம் உள்ள நடைபாதைகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து இருப்பதை கண்ட அவர் அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    சத்துவாச்சாரி சவுத் அவன்யூ ரோடு ஆ.ர்டி.ஓ. அலுவலகம் சாலை பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றில் 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சவுத் அவென்யு சாலையில் பல்வேறு இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மேற்கூரைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர். 
    அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். 

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இது போன்ற நடை பாதைகளை எந்த காரணத்தை கொண்டும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×