என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க. வினர் போராட்டம்
    X
    பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க. வினர் போராட்டம்

    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டம்

    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் ஆக்சிலியம் கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.கவினர் பேனர்களை அகற்றக்கோரி ஆக்சிலியம் கல்லூரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆக்சிலியம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் யாரும் சாலையோரங்களில் பேனர்களை வைக்க கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    ஆனாலும் காட்பாடியில் தி.மு.கவினர் ஆங்காங்கே பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, பேரவை ரவி, அணி செயலாளர்கள் ராக்கேஷ், அமர்நாத், சரவணன், தனசேகரன் பி.எஸ். பழனி மற்றும் வட்ட செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×