search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
    X
    ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

    ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    காட்பாடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    காட்பாடி வட்டார கல்வி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    காட்பாடி வட்டார தலைவர் வி.சிரஞ்சீவிலு தலைமை தாங்கினார். செயலாளர்அனிதா, பொருளாளர் ஆர்.கற்பகமணி, ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் அன்ணையா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வில்வநாதன், சக்திவேல் ஆகியோர் பேசினர்.

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார்.

    ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    Next Story
    ×