என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்22 Jan 2022 10:09 AM GMT (Updated: 22 Jan 2022 10:09 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் இன்று 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வேலூர்:
கொரோனா கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. வேலூர் மாநகர பகுதியில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன்மூலம், இதுவரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 52 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 8 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இது தவிர, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 71, 71 ஆயிரம் சிறுவர்களில், 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது.
முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத் தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X