என் மலர்
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டி.எஸ்.பி.மனோகரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 60 பேர் கொண்ட போலீசார் ஆண்கள் ஜெயிலில் காலை 5.30 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
இதேபோல பெண்கள் ஜெயிலிலும் சோதனை நடத்தினர். 2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடந்தது.
இதில் கவுன்சிலர்கள் 48 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் முழுமையாக புறக்கணித்தனர். தி.மு.க.வை சேர்ந்த புஷ்பலதா வன்னிய ராஜா 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இவர் இன்று மேயர் தேர்தல் நடந்தபோது கூட்டத்திற்கு வரவில்லை.
வேலூர் மேயர் பதவியை பெற புஷ்பலதா கடும் முயற்சி மேற்கொண்டார்.ஆனால் அவருக்கு மேயர் சீட் வழங்கவில்லை.
நேற்று புஷ்பலதா அவரது கணவர் வன்னியராஜா இருவரும் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்தனர்.
அப்போது கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். எங்களுக்கு ஏன் மேயர் பதவி தரவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் வேலூர் தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புஷ்ப லதாவின் கணவர் வன்னிய ராஜா கூறுகையில்:-
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயராக அறிவிக்கப்பட்ட சுஜாதா ஆகியோரிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அதனால் புஷ்பலதா கூட்டத்தை புறக்கணித்தார் என்றார்.
இதேபோல தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் விமலா இன்று நடந்த மேயர் தேர்தல் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
மேயர் தேர்தலை தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.48 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த சுஜாதா மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.
மேயர், துணை மேயர் தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.






