என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீலட்சுமி
    X
    ஸ்ரீலட்சுமி

    லாரி அதிபரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

    லாரி அதிபரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பிரபு சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி (வயது 37) இவர்களுக்கு ரூபேஷ் (12), தன்ஷிகாவை (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தெரிந்தவர்கள் உறவினர்கள் என பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். பல லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில் அதற்கான வட்டி பலர் திருப்பித் தராமல் உள்ளனர். சிலர் வாங்கிய பணத்தையும் தராமல் உள்ளனர்.  

    லட்சுமி பணத்தை கொடுத்தவர்களிடம்   திருப்பி கேட்டுள்ளார். பலமுறை கேட்டும் பணம் திருப்பித் தரவில்லை இந்நிலையில் பணத்தை கேட்டு அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். அப்போது பணம் வாங்கியவர்கள் லட்சுமியை அவதூறாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளானார். 

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியூர் சென்றிருந்த அவரது கணவர் பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து விரைந்து வந்த பிரபு இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்த போது லட்சுமி தெலுங்கில் நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் பெற்றவர்கள் பெயர்களை எழுதி வைத்துள்ளார். மேலும் கடனை திருப்பி கேட்டபோது அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் அவதூறாகப் பேசியது குறித்தும் அதில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கில் எழுதிய கடிதத்தை கைப்பற்றி அதனை தமிழ் மொழியாக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல லட்ச ரூபாய் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து விட்டு பணத்தை திருப்பி கேட்ட போது அவதூறாகப் பேசியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×