என் மலர்tooltip icon

    வேலூர்

    • வருவாய்த்துறையினர் சோதனை
    • 145 மது பாட்டில்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நேதாஜி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதனை ஒட்டிய படி பாரும் உள்ளது சுதந்திர தினத்தன்று அரசு உத்தரவை மீறி அந்த பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிசந்தர் உள்ளிட்ட வருவாய் துறையினர் திடீரென அப்பகுதியில் மதுக்கடை ஒட்டியபடி உள்ள பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து வருவாய்த்துறையினர் அங்கிருந்து 145 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த ஊழியர்களை மது பாட்டில்களையும் மேல் நடவடிக்கையாக குடியாத்தம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • நாளை தொடங்குகிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் காட்பாடியில் வருகிற நாைள புதன்கிழமை தொடங்குகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளுக்கு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் காட்பாடி காந்திநகரில் உள்ள தொ-ழில் முதலீட்டு கழக வேலூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற நாைள புதன்கிழமை தொடங்குகிறது.

    இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் போன்றவை குறித்து விளக்கங்கள் தரப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்கம் வரை கிடைக்கும்.

    முகாமில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றம் அரசின் மானிய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • மேயர் சுஜாதா தேசிய கொடி ஏற்றினார்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    வேலூர்

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னிய ராஜா, நரேந்திரன், யூசுப் கான், மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ் சங்கர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    மேலும் மாநகராட்சி வளாகம் முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்டல குழு தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    • மதில்சுவரில் ஏறிகுதித்து செல்லும் இளம்பெண்கள்
    • விடுமுறை நாட்களில் பூங்காவை திறக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி வேலூர் ேகாட்டையில் தாய் நடந்தது. இந்தக் கோட்டையில் திப்பு சுல்தான் குடும்பத்தினர், இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆகியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோட்டையை ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

    வேலூர் கோட்டையில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். கோட்டை மதில் சுவர்கள் மூவண்ண மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது.

    மேலும் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தின விடுமுறை என்பதால் கோட்டைக்கு காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.

    கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், மற்றும் கோட்டை கொத்தளம் பகுதியில் குழந்தைகளுடன் சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் ஏராளமானோர் கோட்டை பூங்காவில் பொழுதை கழித்தனர்.

    வழக்கத்தை விட கோட்டை கொத்தளம் மற்றும் பூங்கா பகுதியில் அதிக காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    கோட்டை அருங்காட்சியகம் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் அருங்காட்சியகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் கோட்டை வளாகம் இன்று களைகட்டியது.கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்தது.

    வேலூர் முன்பு உள்ள கோட்டை பூங்கா கதவு மாலை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.பகல் நேரங்களில் இந்த பூங்காவிற்கு செல்லும் கதவுகள் மூடப்படுகின்றன.

    இதனால் கோட்டை பூங்காவில் கம்பிவேலியை ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். தற்போது பூங்கா நுழைவுப் பகுதியில் கம்பி வேலி உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இன்று கோட்டைக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கோட்டை பூங்காவிற்கு ஏறி குதித்து சென்றனர்.

    சில மாணவிகள் ஏறி குதிக்கும் போது தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இது போன்ற அவல நிலையை தடுக்க விடுமுறை நாட்களில் கோட்டை பூங்காவில பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் பூங்கா கதவுகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    வேலூர்

    வேலூரில் சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு தேசிய கொடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.

    விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இறுதியில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
    • கூடுதலாக வசூலித்த பணம் பயணிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டது

    வேலூர்

    பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை இருந்ததால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ரெயில்சேவை, அரசு போக்குவரத்து சேவை கிடைக்காததால் பலர் தனியார் போக்குவரத்து சேவையை பயன்படுத்தினர். அதன்படி பலர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்குச் செல்ல ஆர்வம் காட்டினர்.

    ஆனால் பயணிகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்காமல் சில தனியார் பஸ்கள் கூடுதலாக வசூலித்தனர்.

    இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. இதையடுத்து சென்னையில் இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதேபோல வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் செந்தில்வேலன் (வேலூர்), காளியப்பன் (வாணியம்பாடி, திருப்பத்தூர்), துரைச்சாமி (ஓசூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார் (ராணிப்பேட்டை), மாணிக்கம் (வேலூர்) உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சுமார் 130 ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 27 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும், 7 ஆம்னி பஸ்கள் ரூ.19 ஆயிரத்து 400 கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தெரிய வரவே, அந்தக் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

    இணக்க கட்டணமாக ரூ.42 ஆயிரத்து 500, பல்வேறு வரிகள் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரகசியம் காக்கப்படும்
    • போலீஸ் சூப்பரண்டு தகவல்

    வேலூர்

    போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என போலீஸ் சூப்பரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போதை பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணாவ் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 9092700100 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் இந்த எண்ணை பயன்படுத்த லாம். எனது நேரடி கட்டுப்பாட்டில் இந்த எண்ணில் வரும் புகார்கள் குறித்து விசாரிக்கப்படும்.

    தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும். தகவல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவிக்கப்படும்.

    இதுகுறித்து பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. 24 மணி நேரமும் மக்கள் புகார் அளிக்கலாம். போதை பொருட்கள் ஒழிப்பின் ஒரு பகுதியாக இந்த எண் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இந்தாண்டில் இதுவரை போதை கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக சுமார் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவை விட இந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு அதிகம். கஞ்சா, குட்கா கடத்திய 80 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து நெரிசல்
    • போலீசார் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரின்சர்க்கிளில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.

    தினந்தோறும் இந்த நெரிசல் வாடிக்கையாகி விட்டபோதிலும் வாகன ஓட்டிகள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு கிரீன் சர்க்கிளை கடந்து வருகின்றனர்.இன்று காலை வேலூர் கிரின் சர்க்கிளில் சென்னையிலிருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ் ஒன்றை டிஜிட்டல் பேனர் கம்பிகள் ஏற்றி வந்த மினிலாரி முந்தி செல்ல முயன்றது‌. அப்போது பஸ் மீது பேனர் கம்பிகள் உரசின.

    இதனால் பஸ் அங்கே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தை சீர் செய்யாமல் 2 வாகன டிரைவர்களும் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மேலும் நெரிசல் அதிகமானது. அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 2 டிரைவர் களையும் கடுமையாக எச்சரித்து பஸ் மற்றும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது

    வேலூர்:

    சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ஆசிரியை கீதா இணைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் உஷா பால்சன் மெட்ரிக் பள்ளி முதல்வர் திங்கள் ஜான்சன் துணை முதல்வர் ஜாய்சி ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை முதல்வர் ஹெப்சிபா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு மற்றும் பலதரப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் சர்வதேச அளவில் ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தங்க பதக்கத்தை வென்று வருகின்றனர்.

    வரும் காலங்களில் நீங்களும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு முறையான பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

    முதன்மை இயக்குனராக அர்ஜுனா விருந்து பெற்ற அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் கலந்துகொண்டு பேசினார்.முடிவில் பள்ளி விளையாட்டு குழு தலைவி கோலின் ஜெப்ரி நன்றி கூறினார்.

    சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் சுனிதா பால்துரை கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நர்மதா அணி தட்டி சென்றது. முடிவில் பள்ளி மாணவர் தலைவர் சிந்து பிரியா நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் உஷா வயது 35 இவர் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் கல்லூரி முடித்த பின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராஜிப்பட்டி வழியாக செதுக்கரைக்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து நடந்து சென்ற விரிவுரையாளர் உஷா அருகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவவதற்குள் பைக்கில் வந்தவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    செயின் பறிப்பு சம்பவம் குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் சுற்றுப்பகுதியில் உள்ள பரதராமி, கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு உள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை துரிதப்படுத்தப்பட்டது. இருப்பினும் பைக்கிள் திருடர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் அருகில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு அதில் பதிவான பதிவுகள் கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் நகர் முழுவதும் சுமார் 95 கேமராக்கள் நகர மக்களின் பங்களிப்புடன் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதில் 15-க்கும் குறைவான கேமராக்களே வேலை செய்கிறது.

    பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்வதில்லை. இது மோட்டார் சைக்கிள் திருடர்கள், செயின் பறிப்பு கொள்ளையர்கள் உள்ளிட்டோர்களின் பதிவுகள் கேமராக்களில் பதிவாகவில்லை.

    இதனால் துப்பு துலக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    • இன்ஸ்பெக்டரை சிறைபிடித்து போராட்டம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த பெருமாள் குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிலர் லாரி மூலம் ஏரி மண் கடத்தல் நடக்கிறது.

    நேற்று இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கள்ளத்தனமாக ஏரி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது.

    இதில் பைக்கில் சென்ற பெருமாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (வயது 42) என்பவரின் கால்கள் முறிந்தது.விபத்தில் காயம் அடைந்த பூபாலனை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வாகனத்தை மறித்து சிறை பிடித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி டி.எஸ்.பி பழனி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் 2 மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    விபத்து குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்

    குடியாத்தம்:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது.

    75 மாணவிகள் கலந்து கொண்ட இந்த பாரதமாதா உருவப்படம் 40 அடி அகலத்திலும் 50 அடி நீளத்திலும் சுமார் எட்டு மணி நேரம் பணியாற்றி வரைந்தனர்.

    சிறப்பாக பாரதமாதா உருவப்படத்தை வரைந்த மாணவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீலி கிறிஸ்டி, நகர மன்ற உறுப்பினர் ஜாவித் அகமது, அபிராமி கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

    மாணவிகள் வரைந்த பாரதமாதா உருவப்படத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து பாராட்டி வருகின்றனர்.

    ×