என் மலர்
வேலூர்
- வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
- உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார்.
வேலூர்:
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலாலில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்து விட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமானத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்
இது தொடர்பாக ஜவுரிலால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10-வது தெரு, திருவண்ணாமலை தேனி மலை பகுதி, திருவண்ணாமலை-வேலூர் சாலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்து அதிலிருந்த ரூ.75 லட்சத்தை நேற்று முன்தினம் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகள், மாவட்ட, மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை எதிரொலியாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில் காவலாளிகள் உள்ள ஏ.டி.எம். மையங்கள் எத்தனை உள்ளது? காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் எத்தனை என இருபிரிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மேலும் விரைவில் ஏடிஎம் மையங்களில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை நடத்த உள்ளார் என்றனர்.
- டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடை
- வேலூர் போலீசார் அதிரடி உத்தரவு
வேலூர்:
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மயான கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மயானகொள்ளை விழாவில் செல்லவுள்ள தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மயானக்கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீப்பிடிக்கக்கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், மின் சாதனப்பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும்.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்படும் சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலி அளவு வடிவிலான நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது, மின் திருட்டு செய்திடல் கூடாது. நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர் பேனர்களோ, மதத்தலைவர்கள் பேனர்களோ வைத்தல் கூடாது.
பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது வருவாய், காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். சாமி சிலை ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு 3 மணிக்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வித இடையூறும், இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
சாமி சிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். மாறாக மாட்டு வண்டிகள் மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டு காளி, காட்டேரி நீலி, சூலி, அனுமான் போன்ற பல வேடங்கள் தரித்து பல பிரிவுகளாக ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் கலந்து கொள்ளவேண்டும்.
மயானக்கொள்ளை ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் மற்ற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் ஒலிபெருக்கி அமைத்து இசை தட்டு முழங்கியோ, பேசிபோ பாடல் இசைத்தோ ஊர்வலத்தில் செல்ல அனுமதி இல்லை.
மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்தின் இடையிலோ அல்லது ஊர்வலத்தின் கடைசியிலோ செண்டமேளம், ஆகியவைகளை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரக்கூடாது. தாரை தப்பட்டை
மயானக் கொள்ளை ஊர்வலத்திற்கு முன்பு மட்டும் நிர்வாகிகளுடன் போக்குவரத்திற்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படாமலும் ஊர்வலத்தை நிறுத்தாமலும் நகர்ந்து கொண்டே மங்கள மேளம் அடித்து செல்லவும்.
மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது வழிநெடுகிலும் பட்டாசுகளை ஆங்காங்கே வெடிக்கக் கூடாது. ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்திலும், சாமி சிலை சேரும் சுடுகாட்டிலும் மற்றும் ஊர்வலம் நின்று பேச அனுமதிக்கப்பட்ட இடத்திலும் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் வரவேண்டும்.
மயானக் கொள்ளை ஊர்வலம் மசூதி மற்றும் சர்ச் வழியே செல்லும் போது ஊர்வலத்தில் செல்பவர்கள் மசூதிக்கோ, முஸ்லீம் மதத்தினருக்கோ புண்படும் வகையிலான செயல்களையோ செய்து கொண்டோ கோஷமிட்டுக்கொண்டோ அல்லது மசூதி முன்பு நின்று ஆட்டம் போடவோ கூடாது.
மயானக் கொள்ளை ஊர்வலத்தில் செல்பவர்கள் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்களைக் வைக்க கூடாது.
மயானக் கொள்ளை 19-ந் தேதி நடைபெற ஊர்வலத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊர்வலம் நடைபெற உள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் பிற இடங்களுக்கு அனுமதி கிடையாது.
மயானக் கொள்ளை ஊர்வலத்தில் வருபவர்கள் யாரேனும் மது அருந்திய நிலையில் வரக்கூடாது. அவ்வாறு யாரேனும் வந்தால் தேவைப்படும் பட்சத்தில் மது போதையில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி ஊர்வலத்தினை அமைதியாக நடத்திட காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.
மயானக் கொள்ளை திருவிழா தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் வைக்ககூடாது மீறி வைப்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
சாமி ஊர்வலத்தை மாலை 6 மணிக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு பழனி இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி செந்தில்குமார் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
- ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தீவிரம்
அணைக்கட்டு:
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நேற்று நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தால் வேலூர் மாவட்டம் வழியாக கொள்ளையர்கள் கர்நாடக, ஆந்திர மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதால், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர வின்பேரில், பள்ளி கொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியாத்தம் சாலை அதேபோல் வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையிலும் போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், முருகன் மற்றும் போலீசார் அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- வேலூர் மாநகராட்சி மீது பரபரப்பு புகார்
- கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் மனு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.வேலூர் மாநகராட்சி 32 -வது வார்டு கொணவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது;
கொணவட்டம் விரிவு பகுதியான இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு சாலைகள் கழிவுநீர் கால்வாய் சீரான குடிநீர் வசதி போதுமான மின்விளக்கு வசதி குப்பை தொட்டிகள் சுகாதார பராமரிப்பு வசதிகள் இல்லை.
இது பற்றி பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
வேலூர் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் வேகத்தை அடிப்படை வசதிகள் செய்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.
இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேலூர் மாநகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- அந்தந்த ஒன்றியங்களில் நடத்த ஏற்பாடு
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்க மைதானத்திற்குப் பதிலாக ஒன்றிய அளவில் நடத்தப்படுகிறது.
கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18-ந் தேதியும், குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 19-ந் தேதியும், காட்பாடியிலுள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20-ந் தேதியும், வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 25-ந் தேதியும் மற்றும் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2-6ந் தேதியும் நடைபெறவுள்ளன.
ஒன்றியத்தில் முதலிடம், இரண்டாமிடம் பெறும் 2 அணிகள் வீதம் மொத்தம் 10 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். பிற போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏதும் இல்லை.
போட்டி அட்டவணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்று வருவதற்கான சான்றிதழினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்களிடமிருந்து பெற்று போட்டி நடைபெறும் இடத்தில் தவறாது சமர்ப்பித்து கலந்து கொள்ளுதல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கம்ப்யூட்டர்கள் திடீர் பழுதானது
- கைகளால் ரசீது எழுதி கொடுக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்களை உள்ளே அனுமதித்தனர். வழக்கத்தை விட குறைதீர்வு கூட்டத்தில் இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் மனு பதிவு செய்யக்கூடிய இடத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்குள்ள சில கம்ப்யூட்டர்கள் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் மனு அளித்த பொது மக்களுக்கு அதற்கான ரசீது கைகளால் எழுதி தரப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மனு பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இது குறித்து அங்கிருந்த ஊழியர் கூறுகையில்:-
வழக்கத்தைவிட இன்று பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொடுத்தால் அதிக நேரம் அவர்கள் நிற்க வேண்டி இருக்கும். எனவே கைகளால் ரசீது எழுதி கொடுக்கப்பட்டது என்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்க நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் சர்வீஸ் சாலைக்கு அருகிலும் ஒரு நுழைவாயில் திறக்க ப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எந்தவித சோதனை யும் நடைபெறவில்லை பொது மக்கள் சர்வசாதாரணமாக அந்த வழியாக வந்து சென்றனர்.
- வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு
- வேலூர் மனவளக்கலை மன்றம் சார்பாக நடந்தது
வேலூர்:
வேலூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோக மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பாக உலக சமுதாய சேவா சங்கம் - கிராமிய சேவை திட்டம் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல் அரசம்பட்டில் அறக்கட்டளையின் தலைவர் பரமேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரின் நன்கொடையால், கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மண்டலத் தலைவர் ராம. அருள்ஜோதி வரவேற்புரை வழங்கினார்.
இயக்குநர் முருகானந்தம் திட்ட அறிமுகவுரை ஆற்றினார். வேலூர் குமரன் மருத்துவமனை டாக்டர். குமரகுரு, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலரசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருகுமரன் தலைமை தாங்கினார்.
மற்றும் ஊர் தர்மகர்த்தா நடராஜன், நாட்டாண்மை தரணி மேட்டுக்குடி குட்டி கவுண்டர், ஒன்றிய கவுன்சிலர் சு. பிரேமலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அமைதி கிராமமாக மாற்றுவது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். யோகா, உடற்பயிற்சி, காயகல்பம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், மருத்துவ முகாம், மனநல மருத்துவர் ஆலோசனை, பெண்கள் மேம்பாடு, குடும்ப அமைதிக்கான ஆலோசனைகள், அகத்தாய்வு பயிற்சிகள் போன்ற பலவும் 5 மாத காலம், தினமும் இலவசமாக கற்றுத்தரப்படும்.
- கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
சிருஷ்டி மெட்ரிக் பள்ளியில் உத்சவ் விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ மகாதேவன் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிருஷ்டி பள்ளியின் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் திங்கள் ஜான்சன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் இன்றைய கால நிலையில் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டுகளால் இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் இயல், இசை, நாடக நிகழ்ச்சி களால் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நமது உள்ளுணர்வை வளர்ப்பது குறித்து ஸ்ரீ ரவி சங்கர் வித்யா மந்திர் அறக்கட்டளை பிரதிநிதிகள் தெள்ளத் தெளிவாக செயல்படுத்தி காட்டியது பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
முடிவில் மாணவி நவிலா நன்றி கூறினார்.
- மிகவும் அரிதான மார்பு சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்
- சிறப்பாக செயல்பட்ட மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு
வேலூர்:
வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிகவும் அரிதான மார்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த 13 வயது சிறுவன்ரி யாதுல் இஸ்லாம் என்பவருக்கு குறைந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சிறுவன் வேலூர் மற்றும் பல இடங்களில் உள்ள மருத்துவமனையினை அணுகியுள்ளார், கடுமையான பெக்டஸ் அகழ்வாராய்ச்சியின் வடிவத்தில் மார்பு சிதைவு காரணமாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதயம் மற்றும் நுரையீரல் மீது கடுமையான அழுத்தத்தால் மார்பின் முன்பகுதி பின்னோக்கி தள்ளப்படும் அரிதான நிலை இது. ஆனால் அறுவை சிகிச்சையில் உள்ள சிரமம் மற்றும் சிக்கலான காரணத்தால் நோயாளிக்கு தேவையான சிகிச்சை மறுக்கப்பட்டது.
ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மருத்துவர்கள் குழு இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, முழு எண்டோஸ்கோபி வழிகாட்டுதலின் கீழ், பல புதுமையான வழிமுறைகளை பின்பற்றி, அறுவை சிகிச்சையினை குறைந்த பட்ச ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
டாக்டர். வினோத்குமார் மணிகலா (இருதய அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். ரெஜித் மேத்யூ பிப் (எலும்பியல் நிபுணர்), டாக்டர். ஸ்ரீநிவாஸ் (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். மதன் (இருதய மயக்க நிபுணர்) ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு. இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டாம் நாளில் மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் நோயாளி நடக்க தொடங்கினார். மேலும் நான்காவது நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது மகன் முழு குணமடைந்து இயல்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு, சிறுவனின் பெற்றோர் மிகவும் ஆனந்தமடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
நம் மருத்துவமனை சிறப்பான சிகிச்சையினை மிகக் குறைந்த செலவில் செய்வதற்கான சிறந்த மருத்துவமனை என்பதனை அனைவரும் அறிவர். இன்று வேற்று நாட்டவரும் நம் மருத்துவமனையில் பயன் பெறுகின்றனர். கடினமான அறுவை சிகிச்சை முறையினை மிகச் சிறந்த சிகிச்சை கருவிகள் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களால் செய்து முடித்து நம் மருத்துவர்கள் நம் மருத்துவமனையின் புகழினை எல்லைகள் கடந்து பரப்புகின்றனர். இதன்மூலம் நோயாளிகள் பயனடைகின்றனர். எங்கள் எல்லா முயற்சிகளிலும் எங்களை வழிநடத்தும் எங்கள் சக்தி அம்மாவுக்கு நன்றியினையும் இந்த சிறுவனின் பெற்றோரின் ஆனந்த கண்ணீரை காணிக்கை யாக்குகின்றேன்'. இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பாக செயல்பட்ட மருத்துவக்குழுவினை பாராட்டினார்.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
- வி.ஐ.டி.யில் அன்பழகன் நூற்றாண்டு விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி.யில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
தமிழியக்கம், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழாவுக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பேராசிரியர் அன்பழகன் 9 முறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.எல்.சி., ஒருமுறை எம்.பி., 4 முறை அமைச்சராக இருந்தவர். கொள்கை பிடிப்பு கொண்டவர். கருணாநிதிக்கும் பேராசிரி யருக்கும் 76 ஆண்டுகள் நட்பு எங்கும் பார்க்க முடியாது. அடுத்த தலைமுறையினர் பெரியார் கொள்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும், அண்ணாவின் எழுத்து பேச்சுக்களை படிக்க வேண்டும், கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என்று கூறுவார்.
கி.பி.470-ல் திராவிட சங்கத்தை தோற்றுவித்த சமணர் வஜ்ரநந்தி. 1550 ஆண்டுகளுக்கு முன்பே சாதி, சமயம் இல்லாத திராவிடத்தை வளர்க்க முற்பட்டார்கள். 1908-ல் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்டவர் பெரியார்'' இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-
''அண்ணாவுக்கு அருகில் நின்ற முதல் மாணவர் பேராசிரியர். சென்னை சென்றால் பேராசிரியர் வீட்டில்தான் தங்குவார். அண்ணாவின் முன்பாக கால் மேல் கால் போட்டு அமரக்கூடிய ஒரே ஆள் பேராசிரியர்தான். எம்.ஜி.ஆர் குறித்து வீராசாமி பேசும்போது அதற்கு பதில் கொடுக்க எம்.ஜி.ஆர் எழுந்திருக்கும்போது 'ராமச்சந்திரா உட்காரு' என பெயரிட்டு கூறுவார் பேராசிரியர். தலைவருக்கு அருகில் பொதுச்செயலாளர் இருக்கை இருக்கும். தலைவர் அருகில் சென்றால் அவரது இருக்கையில் உட்காரச் சொல்வார். நீயும் என்னைக்காவது உட்காருவ என்பார். அவர் கூறியபடி அண்ணா, நாவலர், பேராசிரியருக்கு அடுத்தபடியாக நான் பொதுச்செயலாராகி இருக்கிறேன்'' என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் விழா பேருரையாற்றினார். ''ஏங்கல்ஸ்-மார்க்ஸ் போல் கலைஞரும் பேராசிரியரும் இருந்தனர். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அண்ணா எங்கே என்று போலீஸ் தேடியது. அவர், பேராசிரியரின் சம்பந்தி ராஜநாயகத்தின் வீட்டில் இருந்தபடி அமைச்சரவை அமைத்துக் கொண்டிருந்தார் என பின்னாளில் தெரியவந்தது.
1942-ல் அண்ணா திருவாருருக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதும் தஞ்சாவூரில் ெரயிலில் ஏறி அண்ணாவிடம் பேராசிரியர் பேசினார். திருவாரூர் கூட்டத்தில் அண்ணா பேசுவதற்கு முன்பாக பேராசிரியரை அறிமுகம் செய்து வைத்து பேச வைத்தார். அங்குதான் கலைஞர்-பேராசிரியர் சந்திப்பு ஏற்படுகிறது.
1943-ல் திருவாரூர் தமிழ் மன்றத்தில் பேச அண்ணாவை கலைஞர் அழைத்தார். அங்கு பேராசிரியர் மட்டும் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் பேராசிரியரை வழியனுப்ப செலவுக்கு பணம் இல்லை. வீட்டில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை அடகு வைத்து பேராசிரியரிடம் வழிச்செலவுக்கு பணம் கொடுத்தார் கலைஞர்.
நெருக்கடி நிலை ஏற்பட்டபோது திமுகவுக்கு ஆபத்து வந்தபோது கோவையில் திமுக மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலைஞர் கடைசியாக பேச வேண்டும். அதற்கு முன்பாக நாவலர், பேராசிரியர் பேச வேண்டும். பேராசிரியர் பேசும்போது 'கலைஞரை தலைமை தாங்க அழைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு அண்ணாவின் தூங்காத இதயமே வா என்றும் பெரியாரின் சாயலை, துணிச்சல், உறுதியை கலைஞரிடம் பார்க்கிறேன். அண்ணாவின் சாயலை, பேச்சின் ஈர்ப்பின் எழுத்தின் தாக்கமும் கலைஞரிடம் பார்க்கிறேன் என்று அழுத்தித் சொன்னார்'' என்றார்.
இதில், தமிழியக்க பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர், பேராசிரியர் அன்பழகனின் மகள் செந்தாமரை, மருமகன் சொக்கலிங்கம், மகன் அன்பு செல்வன், பேரனும் வில்லிவாக்கம் எம்லம்ஏவுமான வெற்றியழகன், திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 12 நாட்களாக தலை மறைவாக இருந்த நிலையில் பிடிபட்டனர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுக்கத்தூரில் கடந்த 29-ந் தேதி பள்ளி மாணவியை காதலிக்குமாறு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி வந்தார். இதனை மாணவியின் தந்தை தட்டி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், அவரின் நண்பர்கள் 4 பேருடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களை கும்பல் தாக்கியுள்ளனர்.
பின்னர் வீடு புகுந்து உள்ள இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து மாணவியின் தாயார் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நாலு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர் உட்பட கும்பலை தேடி வந்தனர்.
கடந்த 12 நாட்களாக தலை மறைவாக இருந்து வந்த நிலையில் 2 வாலிபர்களை நேற்று ஒடுக்கத்தூர் அருகே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






