search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமிய சேவை திட்டம் தொடக்கம்
    X

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசிய காட்சி.

    கிராமிய சேவை திட்டம் தொடக்கம்

    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு
    • வேலூர் மனவளக்கலை மன்றம் சார்பாக நடந்தது

    வேலூர்:

    வேலூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோக மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பாக உலக சமுதாய சேவா சங்கம் - கிராமிய சேவை திட்டம் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல் அரசம்பட்டில் அறக்கட்டளையின் தலைவர் பரமேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரின் நன்கொடையால், கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது.

    திருவண்ணாமலை மண்டலத் தலைவர் ராம. அருள்ஜோதி வரவேற்புரை வழங்கினார்.

    இயக்குநர் முருகானந்தம் திட்ட அறிமுகவுரை ஆற்றினார். வேலூர் குமரன் மருத்துவமனை டாக்டர். குமரகுரு, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலரசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருகுமரன் தலைமை தாங்கினார்.

    மற்றும் ஊர் தர்மகர்த்தா நடராஜன், நாட்டாண்மை தரணி மேட்டுக்குடி குட்டி கவுண்டர், ஒன்றிய கவுன்சிலர் சு. பிரேமலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    அமைதி கிராமமாக மாற்றுவது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். யோகா, உடற்பயிற்சி, காயகல்பம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், மருத்துவ முகாம், மனநல மருத்துவர் ஆலோசனை, பெண்கள் மேம்பாடு, குடும்ப அமைதிக்கான ஆலோசனைகள், அகத்தாய்வு பயிற்சிகள் போன்ற பலவும் 5 மாத காலம், தினமும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

    Next Story
    ×