என் மலர்

    நீங்கள் தேடியது "Rural Service Scheme"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு
    • வேலூர் மனவளக்கலை மன்றம் சார்பாக நடந்தது

    வேலூர்:

    வேலூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோக மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பாக உலக சமுதாய சேவா சங்கம் - கிராமிய சேவை திட்டம் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல் அரசம்பட்டில் அறக்கட்டளையின் தலைவர் பரமேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரின் நன்கொடையால், கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது.

    திருவண்ணாமலை மண்டலத் தலைவர் ராம. அருள்ஜோதி வரவேற்புரை வழங்கினார்.

    இயக்குநர் முருகானந்தம் திட்ட அறிமுகவுரை ஆற்றினார். வேலூர் குமரன் மருத்துவமனை டாக்டர். குமரகுரு, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலரசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருகுமரன் தலைமை தாங்கினார்.

    மற்றும் ஊர் தர்மகர்த்தா நடராஜன், நாட்டாண்மை தரணி மேட்டுக்குடி குட்டி கவுண்டர், ஒன்றிய கவுன்சிலர் சு. பிரேமலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    அமைதி கிராமமாக மாற்றுவது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். யோகா, உடற்பயிற்சி, காயகல்பம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், மருத்துவ முகாம், மனநல மருத்துவர் ஆலோசனை, பெண்கள் மேம்பாடு, குடும்ப அமைதிக்கான ஆலோசனைகள், அகத்தாய்வு பயிற்சிகள் போன்ற பலவும் 5 மாத காலம், தினமும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.

    தென்காசி:

    உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

    புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஷோஹோ நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார்.

    உலக சமுதாய சேவா சங்க திருநெல்வேலி மண்டல தலைவர் அண்ணாமலையார் வரவேற்றார்.

    ஷோஹோ நிறுவன அலுவலர் கீர்த்தி வாசன், உலக சமுதாய சேவா சங்க இணை இயக்குனர்கள் ராசாசுடலைமுத்து, பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குருரங்கதுரை, திருநெல்வேலி மண்டல செயலாளர் அரசுஈஸ்வரன், மண்டல துணைத் தலைவர் சுடலையாண்டி, குற்றாலம் மனவள கலை மன்ற செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேவா சங்க இயக்குனர் முருகானந்தம் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் பலர் பேசினர்.

    அருமைக்கலை க்காரியாலயம் குழுவினரின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா சக்தி, கீழப்பாவூர் யூனியன் துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.

    ×