search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctors feat"

    • மிகவும் அரிதான மார்பு சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்
    • சிறப்பாக செயல்பட்ட மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிகவும் அரிதான மார்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த 13 வயது சிறுவன்ரி யாதுல் இஸ்லாம் என்பவருக்கு குறைந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இச்சிறுவன் வேலூர் மற்றும் பல இடங்களில் உள்ள மருத்துவமனையினை அணுகியுள்ளார், கடுமையான பெக்டஸ் அகழ்வாராய்ச்சியின் வடிவத்தில் மார்பு சிதைவு காரணமாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதயம் மற்றும் நுரையீரல் மீது கடுமையான அழுத்தத்தால் மார்பின் முன்பகுதி பின்னோக்கி தள்ளப்படும் அரிதான நிலை இது. ஆனால் அறுவை சிகிச்சையில் உள்ள சிரமம் மற்றும் சிக்கலான காரணத்தால் நோயாளிக்கு தேவையான சிகிச்சை மறுக்கப்பட்டது.

    ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மருத்துவர்கள் குழு இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, முழு எண்டோஸ்கோபி வழிகாட்டுதலின் கீழ், பல புதுமையான வழிமுறைகளை பின்பற்றி, அறுவை சிகிச்சையினை குறைந்த பட்ச ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    டாக்டர். வினோத்குமார் மணிகலா (இருதய அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். ரெஜித் மேத்யூ பிப் (எலும்பியல் நிபுணர்), டாக்டர். ஸ்ரீநிவாஸ் (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். மதன் (இருதய மயக்க நிபுணர்) ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு. இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டாம் நாளில் மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் நோயாளி நடக்க தொடங்கினார். மேலும் நான்காவது நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது மகன் முழு குணமடைந்து இயல்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு, சிறுவனின் பெற்றோர் மிகவும் ஆனந்தமடைந்தனர்.

    இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

    நம் மருத்துவமனை சிறப்பான சிகிச்சையினை மிகக் குறைந்த செலவில் செய்வதற்கான சிறந்த மருத்துவமனை என்பதனை அனைவரும் அறிவர். இன்று வேற்று நாட்டவரும் நம் மருத்துவமனையில் பயன் பெறுகின்றனர். கடினமான அறுவை சிகிச்சை முறையினை மிகச் சிறந்த சிகிச்சை கருவிகள் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களால் செய்து முடித்து நம் மருத்துவர்கள் நம் மருத்துவமனையின் புகழினை எல்லைகள் கடந்து பரப்புகின்றனர். இதன்மூலம் நோயாளிகள் பயனடைகின்றனர். எங்கள் எல்லா முயற்சிகளிலும் எங்களை வழிநடத்தும் எங்கள் சக்தி அம்மாவுக்கு நன்றியினையும் இந்த சிறுவனின் பெற்றோரின் ஆனந்த கண்ணீரை காணிக்கை யாக்குகின்றேன்'. இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பாக செயல்பட்ட மருத்துவக்குழுவினை பாராட்டினார்.

    • விளையாட்டு பொருட்களில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
    • குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். இவர் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    2-வது மகன் தமிழ்முகிலன். பிறந்து 10 மாதம் ஆகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தமிழ்முகிலனுடன் அவனது சகோதரன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது விளையாட்டு பொருட்களின் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.

    இதனை பார்த்த சிறுவன் தனது தந்தையிடம் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை அரியலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில்தஞ்சையில் உள்ள எம்.ஆர். மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்த நிலையில் 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பு சிறுவன் விழுங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவனுக்கு 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

    குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணர் குளாளன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது என்றனர்.

    குழந்தையின் தந்தை சங்கர் கூறுகையில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். டாக்டர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது என்றார்.

    • சிறுமியின் மூளை தண்டுவட பகுதியில் இருந்த கட்டியை அகற்றி ஹானாஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
    • 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.

    மதுரை

    திருச்சி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் துரைராஜன். கல்லூரி பேராசிரியர். இவரது 2-வது மகள் நிதிஷா (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த சில மாதங்க ளாக அடிக்கடி கழுத்து வலிப்பதாக கூறியுள்ளார். திடீர் திடீரென்று மயங்கியும் விழுந்துள்ளார்.பின்னர் வலது கையில் எழுதி கொண்டிருந்தவர் ரென்று இடது கையால் எழுதுவது, அடிக்கடி கீழே விழுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டார்.

    இந்த நிலையில் சிறுமியை மதுரை ஹானாஜோசப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். மருத்துவ மனை நிர்வாக இயக்குனரும், நரம்பியல் தலைமை டாக்டர் அருண்கு மார் சிறுமியை பரிசோதனை செய்தார்.

    அதில் ஸ்வானானோமா எனப்படும் கட்டி தண்டுவ டத்தின் முன்பகுதியில் வளர்ந்து, மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டுவடத்தை அழுத்தி கொண்டிருந்தது. இந்த கட்டியானது ரத்த ஓட் டத்தை தடுத்து ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. எனவே சிறுமிக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதை தொடர்ந்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

    அதில் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் மைக்ரோ சர்ஜரி எனப்படும் நுண்அறுவை சிகிச்சை மூலம் 9 மணி நேரம் தொடர்ந்து செய்யப் பட்டு 70 சதவீதம் கட்டி முதல் நாள் அகற்றப்பட்டது. அப்போது சிறுமிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச் சையை மேலும் தொடர இயலவில்லை. எனவே அறுவை சிகிச்சை முடிந்த 4-ம் நாள் மறுபடியும் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.

    இதுகுறித்து அந்த மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் கூறியதாவது:-

    இந்த சிறுமியின் எடை 23 கிலோ மட்டுமே இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகொடுப்பது கூட மருத்துவக்குழுவிற்கு சவாலாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சை நடைபெறும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பக்கவாதம் அல்லது வாழ் நாள் முழுவதும் செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய நிலை நேரிடலாம்.

    எனவே நவீன கருவி மூலம் அந்த கட் டியை அகற்றினோம். இது புற்றுநோய் கட்டி அல்ல. தற்போது அவர் நன்றாக உள்ளார். 17 வயது முதல் 64 வயது உடையவர்களுக்கு தான் இது போன்றகட்டி வந்து அகற்றப்பட்டு உள்ளது. முதன் முறையாக இந்த சிறுமிக்கு இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எங்கள் டாக்டர்கள் குழுவினர் சாதித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×