என் மலர்
திருவண்ணாமலை
தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மேளதாளங்களுடன் வந்து 5-ம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் சாமி உற்சவ உலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மதியம் முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாமி உலா பக்தர்களின்றி நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடந்தது. இரவு 9 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தை சுற்றி உலா வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி நேற்று கோவிலில் கொடிமரம், தீப தரிசன மண்டபம், பலி பீடம், சாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள், அந்தூரியம் பூக்கள், அர்சிட், கார்னேசன், ஜிப்சோபிலா உள்ளிட்ட வண்ண மலர்களாலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள் மற்றும் சோளம் போன்றவற்றினாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் வருவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட, மாநில எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அவற்றை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று முதல் திருவண்ணாமலையை சுற்றி 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மேளதாளங்களுடன் வந்து 5-ம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் சாமி உற்சவ உலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மதியம் முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாமி உலா பக்தர்களின்றி நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடந்தது. இரவு 9 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தை சுற்றி உலா வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி நேற்று கோவிலில் கொடிமரம், தீப தரிசன மண்டபம், பலி பீடம், சாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள், அந்தூரியம் பூக்கள், அர்சிட், கார்னேசன், ஜிப்சோபிலா உள்ளிட்ட வண்ண மலர்களாலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள் மற்றும் சோளம் போன்றவற்றினாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் வருவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட, மாநில எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அவற்றை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று முதல் திருவண்ணாமலையை சுற்றி 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. இங்கு பிரபல மருத்துவ நிபுணர்கள், நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.
கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த டாக்டர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் (28), வேறொரு பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் இருவரும் டீன்னிடம் புகார் செய்துள்ளனர். இந்தப்புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் இருவரும் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பெண் டாக்டர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தின் பிரபல அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், சரியாக மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சுவாமி-அம்மன் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று பிச்சாண்டவர் உற்சவம் மேலும் தீபத்துக்கான காடா துணிகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளின காரணமாக திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
இந்த நிலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 9-ஆம் திருவிழாவை முன்னிட்டு தீபக்கொப்பரைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து 2,668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு புதிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. புதிய மகாதீப கொப்பரையை பக்தர்கள் அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்ல புறப்பட்டபோது “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்ற பக்தி கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப் பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் அண்ணாமலையாரை மனதில் தியானித்தபடி மகா தீப கொப்பரையை தூக்கிக் கொண்டு மலை ஏறிச் சென்றனர்.
திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், சரியாக மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சுவாமி-அம்மன் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று பிச்சாண்டவர் உற்சவம் மேலும் தீபத்துக்கான காடா துணிகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளின காரணமாக திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
இந்த நிலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 9-ஆம் திருவிழாவை முன்னிட்டு தீபக்கொப்பரைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து 2,668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு புதிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. புதிய மகாதீப கொப்பரையை பக்தர்கள் அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்ல புறப்பட்டபோது “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்ற பக்தி கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப் பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் அண்ணாமலையாரை மனதில் தியானித்தபடி மகா தீப கொப்பரையை தூக்கிக் கொண்டு மலை ஏறிச் சென்றனர்.
திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் வைத்து பக்தர்கள் வருவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (வெள்ளிக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. மேலும் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மதியத்தில் இருந்து பவுர்ணமி தொடங்க உள்ளதாலும், நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதாலும் நேற்று மதியம் 1 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மதியத்திற்கு மேல் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வர தொடங்கினர். இதில், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலப்பாதையில் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. மேலும் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மதியத்தில் இருந்து பவுர்ணமி தொடங்க உள்ளதாலும், நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதாலும் நேற்று மதியம் 1 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மதியத்திற்கு மேல் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வர தொடங்கினர். இதில், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலப்பாதையில் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடப்பட்டதாக ஐதீகம். ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை. அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்து விடுகிறது.
இதனால் மனமுடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்ததால், அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு காவிரி துலாகட்டத்தில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
இதனால் மனமுடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்ததால், அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு காவிரி துலாகட்டத்தில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
திருவண்ணாமலையில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல நேற்று மதியம் 1 மணியில் இருந்து வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். .
மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைகாண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். .
மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைகாண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக மகா தீபத்தன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நாளை (19-ந் தேதி) மதியம் 2.51 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதனால் வருகிற 20-ந் தேதி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்கலாம்...திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உள்பட பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் போது சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் கோவில் வளாகத்திலேயே பஞ்சமூர்த்திகள் சிறப்பு ரதங்களில் வலம் வந்தனர். நேற்று கோவிலில் 8-ம் நாள் விழா நடைபெற்றது. காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் 5-ம் பிரகாரத்தில் வந்தனர். வழக்கமாக தேரோட்டம் முடிவடைந்த மறுநாள் சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் வலம் வந்த பெரிய ரதத்தின் முன்பு சந்திரசேகரர் எழுந்தருளி நன்றி தெரிவித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. மாலையில் பிச்சாண்டவர் உற்சவ உலா நடந்தது. இதையடுத்து இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக பயன்படுத்தப்படும் காடா துணிகளுக்கு கோவிலில் பூஜை நடைபெற்றது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.
வருகிற 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் போது சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் கோவில் வளாகத்திலேயே பஞ்சமூர்த்திகள் சிறப்பு ரதங்களில் வலம் வந்தனர். நேற்று கோவிலில் 8-ம் நாள் விழா நடைபெற்றது. காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் 5-ம் பிரகாரத்தில் வந்தனர். வழக்கமாக தேரோட்டம் முடிவடைந்த மறுநாள் சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் வலம் வந்த பெரிய ரதத்தின் முன்பு சந்திரசேகரர் எழுந்தருளி நன்றி தெரிவித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. மாலையில் பிச்சாண்டவர் உற்சவ உலா நடந்தது. இதையடுத்து இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக பயன்படுத்தப்படும் காடா துணிகளுக்கு கோவிலில் பூஜை நடைபெற்றது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.
வருகிற 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் தற்போதைய தகவல்படி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிகிறது.
எனவே மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்லாமலும், அவர்களுடைய மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் தற்போதைய தகவல்படி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிகிறது.
எனவே மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்லாமலும், அவர்களுடைய மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம்.
கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.
கோபத்தை குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறினார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.
கோபத்தை குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறினார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை.
நாளை முதல் 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா நடந்து வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை மறுநாள் அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, கூடுதல் கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி கூறியதாவது:-
திருவண்ணாமலை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்க இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
எனவே திருவண்ணாமலைக்கு வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்படும். எனவே நாளை (18-ந்தேதி) முதல் 20-ந்தேதி வரை 50 சதவீத பஸ்கள் மட்டுமே திருவண்ணாமலைக்கு வந்து செல்லும்.
அனுமதிக்கப்பட்ட பஸ்களை தவிர்த்து வேறு வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையிலும், நகர எல்லையிலும் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில்:-
மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கிற கட்டுப்பாடு காரணமாக பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையும். அதனால் 50 சதவீதம் இயக்கினாலும் எங்களுக்கு இழப்புதான் ஏற்படும்.
எனவே 3 நாட்களுக்கு தனியார் பஸ்கள் இயக்குவதை தவிர்க்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா நடந்து வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை மறுநாள் அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, கூடுதல் கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி கூறியதாவது:-
திருவண்ணாமலை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்க இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
எனவே திருவண்ணாமலைக்கு வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்படும். எனவே நாளை (18-ந்தேதி) முதல் 20-ந்தேதி வரை 50 சதவீத பஸ்கள் மட்டுமே திருவண்ணாமலைக்கு வந்து செல்லும்.
அனுமதிக்கப்பட்ட பஸ்களை தவிர்த்து வேறு வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையிலும், நகர எல்லையிலும் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில்:-
மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கிற கட்டுப்பாடு காரணமாக பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையும். அதனால் 50 சதவீதம் இயக்கினாலும் எங்களுக்கு இழப்புதான் ஏற்படும்.
எனவே 3 நாட்களுக்கு தனியார் பஸ்கள் இயக்குவதை தவிர்க்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.
காலிபிளவர் சாகுபடியை பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும்.
குடிமங்கலம்:
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில விவசாயிகள் சிறந்த லாபம் தரக்கூடிய காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
காலிபிளவர் சாகுபடியை பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட கூடியது மற்றும் கால்சியம் சத்து அதிகம் கொண்டது என்ற வகையில் காலிபிளவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால் எல்லா காலத்திலும் காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவரை நல்லமுறையில் பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கத் தொடங்கும். ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும். 90 நாள்களில் அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்யப்படும் காலிபிளவர் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடியை பொருத்தவரை பூக்களை அறுவடை செய்யக் கூடிய தருணத்தில் மழை பெய்ததால் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அசுவினி பூச்சிகள், வெட்டுப்புழுக்கள், கூட்டுப்புழு, நூற்புழு மற்றும் இலைப்புள்ளிநோய் வேர் முடிச்சு போன்றவற்றினால் காளிபிளவர் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். பெதப்பம்பட்டி பகுதியில் காலிபிளவரில் நோய்த்தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






