என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவரின் விளை நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் விவசாய வேலை செய்து வந்தனர்.
அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜீஸ் வாங்கி குடித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையான்குன்னிய அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). கடந்த 26ந்தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராயம் விற்பனை தொடர்பாக தங்கமணியை கைது செய்தனர்.
பின்பு சிறையில் இருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். கடந்த 27ந்தேதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட உள்ளது. தட்டரணை கிராமத்திலுள்ள தங்கமணி வீடு மற்றும் பொதுமக்கள், மாவட்ட மதுவிலக்கு போலீசார், சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26ந்தேதி தங்கமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தங்கமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததார்.
தங்கமணியின் மனைவி மலர் தனது கணவரை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் புகார் கொடுத்தார்.
தங்கமணியின் சாவுக்கு காரணமான போலீசார் மற்றும் சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்தனர்.
இந்த சம்பவம் சட்டசபை கூட்ட தொடரில் எதிரொலித்தது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் போர்கொடி தூக்கினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், பெண் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, ஜெயசந்திரன், ஜெயக்குமார் உட்பட 4 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணை கைதி தங்கமணி இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடி விசாரணைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் 4வது நாளான இன்றும் தங்கமணியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.






