search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிசிஐடி விசாரணை"

    • ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.
    • தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.

    திருவட்டார்:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுகிர்தா. குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6-ந்தேதி கல்லூரி விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் தற்கொலை செய்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் உடன் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் எனது மரணத்திற்கு காரணம் என கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவு போட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்-டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அதுபோல் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.

    தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர். பின் பரமசிவம், ஹரீஷ் ப்ரீத்தியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் அதன் விபரங்களை சென்னையில் உள்ள லேபில் அனுப்பி அதன் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    லேப்டாப்பில் உள்ள முழு விவரங்கள் விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு கோர்ட்டில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இந்த குற்றப்பத்திரிகை மூலம் மாணவி சுகிர்தா மரணத்தில் நீதி கிடைக்கும் என அவரது தந்தை மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்.

    • கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்தார்.

    கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பயிற்சி மருத்துவ மாணவன் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி காரணம் என்று எழுதி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ஹரிஷ், ப்ரீத்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் பரமசிவத்திற்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமின் பெற்ற இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினார்கள். தூத்துக்குடியில் உள்ள ஹரிஷ் வீட்டிற்கும் கும்பகோணத்தில் உள்ள ப்ரீத்தி வீட்டிற்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். ஹரிஷ் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து விசாரணை நடத்தப்பட்டது.

    தற்கொலை செய்த சுகிர்தாவிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அவர் உங்களது பெயரை எழுதி வைத்துள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் ப்ரீத்தி ஒரு நாள் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடமும் போலீசார் 3 மணி நேரம் விசாரித்தனர். இருவரும் கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
    • பேராசிரியர் பரமசிவம் மீண்டும் பாளை அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. மேலும் பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில் பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்காகவும் ஜாமின் மனு விசாரணைக்காகவும் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் நேற்று நாகர்கோவில் அழைத்து வந்தனர்.

    தொடர்ந்து நேற்று மாலை அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவரது ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவம், மீண்டும் பாளை அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரித்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

    இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று அவர் விசாரணைக்கு வருவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில் ஜெயிலில் உள்ள பேராசிரியர் பரமசிவம், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் பரமசிவத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    • மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
    • விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் மூகாம்பிகா கல்லூரியில் படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவி சுகிர்தா விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக மாணவிகளிடமும் சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஹரீஸ், ப்ரீத்தி ஆகியோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த பரமசிவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து ஹரீஸ், ப்ரீத்தியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் ஹரீஷ், ப்ரீத்தி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்ட னர். இந்த நிலையில் முதல் கட்டமாக பயிற்சி மாணவர் ஹரீசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஹரீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

    விசாரணைக்கு ஆஜராகும் பயிற்சி மாணவர் ஹரீஸிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். மாணவி சுகிர்தா தற்கொலை குறித்த விவரங்கள் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரீத்தியிடம் அடுத்த கட்டமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
    • அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடியை சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மாணவி சுகிர்தா, விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அறையில் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் சுகிர்தா குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை சிவகுமார் மற்றும் பலர் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சுகிர்தா தற்கொலை செய்த விடுதி அறையை பார்த்த அவர்கள், சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் போன்றோரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விவரம் சேகரித்தனர். தொடர்ந்து சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவம் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ள ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    இதற்காக பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுக்க வேண்டி, நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் அழைத்து வந்திருந்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இன்று காலையும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். பேராசிரியர் பரமசிவத்தை குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பிறகு மாலையில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது.

    • தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவரது மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 6-ந் தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் லேப்-டாப், செல்போனை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக போலீசார் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஹரிஷ் மதுரை ஐகோட்டில் முன் ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து ப்ரீத்தியை போலீசார் தேடி வந்த நிலையில் அவரும் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை நாகர்கோவில் ஜே.எம்.-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    • வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா (வயது 27) என்பவர் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 10-ந்தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரிஷ் ஆகியோர் மனதளவிலும் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் பின்னர் விசாரணையை தொடங்கினார்கள்.

    மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஹரிஷ், ப்ரீத்தியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஹரிசுக்கு மதுரை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு பயிற்சி டாக்டரான ப்ரீத்தியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். எனவே அவரை பிடிக்க போலீசார் கும்பகோணம் விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு விலை உயர்ந்த 2 மதுபாட்டில்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது எங்கிருந்து வாங்கியுள்ளார் என்பதும் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவல் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். மேலும் முன்ஜாமின் பெற்றுள்ள ஹரீஸிடம் விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அவர் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஹரிசின் முன் ஜாமினை ரத்து செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருவட்டார்:

    குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்த இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு பேராசிரியர் டாக்டர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரீஸ் காரணம் என்று கூறியிருந்தார். அதில் டாக்டர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் ப்ரீத்தி, ஹரீஸ் இருவரும் மனதளவிலும் துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

    கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர் பரமசிவம், ஹரீஸ், ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாக்டர் பரமசிவத்தை குலசேகரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள். நேற்று மூகாம்பிகா கல்லூரிக்கு சென்ற அவர்கள் மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டனர். பின்னர் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர் பயிற்சி டாக்டர் ஹரீசிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • கைது செய்யப்பட்ட சதீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைப்பு
    • இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம்.

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் இன்று சம்பவம் நடைபெற்ற சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×