என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆணழகன் போட்டி நடந்த போது எடுத்த படம்.
ஆரணியில் ஆணழகன் போட்டி
ஆரணியில் ஆணழகன் போட்டி நடந்தது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஸ்பாட்ன்ஸ் பிட்னஸ் ஜிம் மற்றும் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையா–ளர்கள் சங்க மாநில தலைவர் எம்.எஸ்.டி கார்த்தி ஆரணி டவுன் சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆரணி சேர்மன் ஏ.சி.மணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் 50,55 பல்வேறு எடை கொண்ட பிரிவிகளில் இளைஞர்கள் பங்கேற்று தனது உடற்தகுதி தனிதிறமையை காட்டி அசத்தினார்கள்.
இதில் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர் சங்க மாநில தலைவர் கார்த்தி ஆரணி சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சான்றிதழ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மா வட்ட கவுன்சிலர் அருணா குமரேசன் நகரமன்ற கவுன்சிலர்கள் கார்த்தி அரவிந்த் ரிஸ்வானா மாலிக் பழனி நளினி பார்த்திபன் உஷாராணி சிவக்குமார் உள்ளிட் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story






