என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை கைதி தங்கமணி
    X
    விசாரணை கைதி தங்கமணி

    விசாரணை கைதி உயிரிழப்பு- டி.எஸ்.பி., பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்ததையடுத்து டி.எஸ்.பி., பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26ந்தேதி தங்கமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தங்கமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததார்.

    தங்கமணியின் மனைவி மலர் தனது கணவரை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் புகார் கொடுத்தார்.

    தங்கமணியின் சாவுக்கு காரணமான போலீசார் மற்றும் சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்தனர்.

    இந்த சம்பவம் சட்டசபை கூட்ட தொடரில் எதிரொலித்தது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் போர்கொடி தூக்கினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், பெண் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, ஜெயசந்திரன், ஜெயக்குமார் உட்பட 4 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் விசாரணை கைதி தங்கமணி இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    சிபிசிஐடி விசாரணைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 4வது நாளான இன்றும் தங்கமணியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர்.

    இதுசம்பந்தமாக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×