என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளர்கள்.
கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்
ஆரணியில் கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரணி:
ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவரின் விளை நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் விவசாய வேலை செய்து வந்தனர்.
அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜீஸ் வாங்கி குடித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவரின் விளை நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் விவசாய வேலை செய்து வந்தனர்.
அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜீஸ் வாங்கி குடித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






