என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

    திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது52) கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி. மகன்கள் முத்துக்குமார், வெள்ளையப்பன்.  

    முத்துக்குமாரின் மனைவி வேண்டா கேட்டவரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இதனால் வேண்டா அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு துணையாக முத்துக்குமார் மனைவி தேவி உடன் இருந்து வருகிறார். இதனால் முத்துக்குமாருக்கும் அவரது தந்தை முருகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு முருகேஷ் முத்துக்குமாரிடம் மனைவியை அழைத்து வரும்படி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்துக்குமார் இரும்பு கம்பியால் முருகேசின் தலையில் பின்புறமாக தாக்கினார். 

    இதில் படுகாயமடைந்த முருகேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
     
    இது சம்பந்தமாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்துக் கொன்ற முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
    Next Story
    ×