என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விசாரணை கைதி மரணம்: திருவண்ணாமலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை விரைவில் தொடங்குகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையான்குன்னிய அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). கடந்த 26ந்தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராயம் விற்பனை தொடர்பாக தங்கமணியை கைது செய்தனர்.
பின்பு சிறையில் இருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். கடந்த 27ந்தேதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட உள்ளது. தட்டரணை கிராமத்திலுள்ள தங்கமணி வீடு மற்றும் பொதுமக்கள், மாவட்ட மதுவிலக்கு போலீசார், சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.






