என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் உழவாரப்பணி செய்த காட்சி.
    X
    கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் உழவாரப்பணி செய்த காட்சி.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் உழவாரப்பணி

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் சிவனடியார்கள் உழவாரப்பணி செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோமீட்டரை சுற்றியுள்ள அஷ்டலிங்க கோயில்களில் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வரும்போது இக்கோவில்களில் வழிபட்டு செல்கின்றனர். 

    இதனால் கோவில்களில் தூய்மைப்படுத்தும் பணியை பல்வேறு பகுதிகளில் உள்ள சிவனடியார்கள் தானாக முன்வந்து அஷ்டலிங்க கோவில்கள் அருணாசலேஸ்வரர் கோவில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவனடியார்கள் மூலம் உழவாரப் பணி செய்து வருகின்றனர். 

    இப்பணியினை அருணாசல கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
    Next Story
    ×