என் மலர்
ராணிப்பேட்டை
பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜீவா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குழந்தை இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் ஜீவா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாணாவரம் போலீசார், உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜீவாவின் தாயார் சுமதி அளித்த புகாரின்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமாகி 3½ வருடங்களே ஆவதால் ஜீவாவின் தற்கொலை குறித்து கோட்டாட்சியர் பூங்கொடி விசாரணை செய்தார். இதில் ஜீவாவை தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து கணவர் கார்த்திகேயன், மாமனார் நரசிம்மன், மைத்துனர் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜா கிளை சிறையிலும் மாமியார் சாந்தியை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
அரக்கோணம் ரெயில் நிலையம் முக்கியமான சந்திப்பாக உள்ளது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், கோவை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.
அரக்கோணம் தண்டவாள பகுதியில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் அடுத்த மோசூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் தடம்புரண்டது.
நேற்று மதியம் காட்பாடியில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் சித்தேரி அருகே பசுமாட்டின் மீது மோதி தடம்புரண்டது.
இந்த நிலையில் இன்று காலை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பார்மில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
அதை ரெயில் பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தண்டவாளம் சரி செய்யப்பட்டது.
இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் தாமதமாக சென்றன. மேலும் தண்டவாள விரிசல் உடனடியாக சரி செய்யப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதும், ரெயில் தடம் புரள்வதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் 6 முறைக்கு மேல் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (34). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவ பரிசோதனையின்போது, கடந்த 13-ந்தேதி பிரசவத்திற்கு நாள் குறித்து கொடுத்துள்ளனர். ஆனால் அன்று கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்த லோகநாதன் தனது அக்காள் கீதாவின் உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதில் கடும் போராட்டத்திற்கு பிறகு கோமதிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அதிக ரத்த போக்கால் கோமதியின் உடல் நிலை கவலைக்கிடமானது.
இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் உடனடியாக தனது மனைவியை அருகேயுள்ள புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.
அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோகன் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லோகநாதன் அவரது அக்கா கீதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி என்பவரது மனைவி சுதா (வயது 52). மகன் புஷ்கரன் (24).ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு புஷ்கரன் அவரது தாயார் சுதா, பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் கதவைத் தட்டினர். யாரோ உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்கரன் கதவைத் திறக்கச் சென்றார்.
இருந்தாலும் சந்தேகத்துடன் மெதுவாக கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக கதவை உட்புறமாக பூட்டினார். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக புஷ்கரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த புஷ்கரன் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்த அவரது குடும்பத்தினர் கதறி கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். மேலும் புஷ்கரனின் தாயார், பெரியம்மா, பாட்டி ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தனர். புஷ்கரனை கத்தியால் வெட்டினர். இதில் அவர் மயங்கினார்.
இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மாறி மாறி பேசி அந்த கும்பல் அவர்களை மிரட்டினர்.
துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் புஷ்கரன் தாயார் உள்ளிட்ட பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர்.
மொத்தம் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவினர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நாங்கள் மீண்டும் இங்கு வருவோம். உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

புஷ்கரன் செல்போன் மட்டும் கொள்ளையர்கள் கண்ணில்படவில்லை. அந்த போன் மூலம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட 4 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தீரன் சினிமா பட பாணியில் ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மொழிகளில் பேசியதால் இவர்கள் வட இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்...பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி - கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த சிறு வளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் குமார்.பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த 5 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக சக்திவேல் குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சக்திவேல் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






