என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பனப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

    பனப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த சிறு வளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் குமார்.பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த 5 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக சக்திவேல் குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சக்திவேல் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×