என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.
    X
    கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

    கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தடுப்பூசி போட்டவர்களின் பட்டியலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தடுப்பூசி போட்டவர்களின் விவர பட்டியலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சோளிங்கர்:

    சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. அங்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு முறையாக சான்றிதழ் கிடைப்பதில்லை, எனப் புகார் எழுந்தது.

    இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ேநற்று திடீரென கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவர பட்டியலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள 16-வது மெகா தடுப்பூசி போடும் முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதில் முதல் தவணை தடுப்பூசியை அதிக நபர்களுக்கு செலுத்த வேண்டும். அதற்காக, அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் தங்களது முழு பங்களிப்பை அளிக்க வேண்டும். காலை 8 மணிக்கு முகாம் தொடங்குவதில் எந்தக் காலதாமதமும் இருக்கக்கூடாது. மாலை 6 மணிக்கு முன்னதாக முகாமை முடிக்கக்கூடாது.

    தேவைப்படும் இடங்களுக்கு முகாமை மாற்றிக் கொள்ளலாம். செயல்படாத வார்டு பொறுப்பாளர்களின் பெயர் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    அப்போது சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் கணினி ஆபரேட்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×