என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ஆற்காடு அருகே பெண் கட்டிட தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரியகுக்குண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாலாஜா அடுத்த தகரகுப்பத்தை சேர்ந்த மகேஸ்வரி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மகேஸ்வரியும் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி மகேஸ்வரி தகர குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெய்சங்கர் பல இடங்களில் தனது மனைவியை தேடினார். ஆனால் அவரை காணவில்லை.

    ஜெய்சங்கர் இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெரியகுக்குண்டி பகுதியிலுள்ள ஒரு விவசாய கிணற்றில் மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார்.

    இது தொடர்பாக மகேஸ்வரியின் கள்ளக்காதலர்களான பெரிய குக்குண்டி மற்றும் பழையனூரை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் பெரியகுக்குண்டி ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு (27) என்ற கட்டிட தொழிலாளி மகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.

    மகேஸ்வரிக்கும், பிரபுவுக்கும் கடந்த 6 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் கட்டிட தொழிலாளர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து வந்தனர். மேலும் மகேஸ்வரி பிணமாக கிடந்த கிணற்றின் அருகே கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரபு அத்தித்தாங்கலை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து மகேஸ்வரிக்கும் அவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. மேலும் மகேஸ்வரிக்கு பழையனூரை சேர்ந்த அருண் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 30-ந்தேதி இரவு மகேஸ்வரி கையில் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு பிரபுவின் வீட்டின் வழியாக சென்றார். இதைக் கண்ட பிரபு அவரை பின்தொடர்ந்து சென்றார். தொடர்ந்து கிணற்றின் அருகே மகேஸ்வரி நின்று கொண்டு யாருக்கோ போன் செய்து பேசி கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட பிரபு, ' யாருக்கு போன் செய்து பேசுகிறாய். கள்ளக்காதலனை இங்கே வரவழைக்க பேசுகிறாயா ' என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றியதில் பிரபு அங்கிருந்த கல்லால் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் பிரபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், ஒன்றிய பெருந்தலைவர் கலைக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகள் பயன்படும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    நெல் விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். 

    கொள்முதல் நிலையத்தில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    அரக்கோணம் அருகே ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அப்போது ஆந்திர மாநிலம் கச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் ரெயில் அரக்கோணத்திற்கு வந்தது. ரெயில்வே போலீசார் அதில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையில் ஈடுபட்டனர். 

    அதில் கடைசி பெட்டியில் கேட்பாரற்று பைகள் இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

    அதனை பறிமுதல் செய்து யார் கடத்தியது என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கரில் மார்க்கெட்டில் பழைய கடைகளை அகற்றி புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
    சோளிங்கர்:

    ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் சோளிங்கர் பேரூராட்சியாக இருக்கும் போது 1979-ல் 30-கடைகளும், 1987-ல் 31 கடைகளும் கட்டப்பட்டு தினசரி காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது.
     
    இந்த கட்டிடங்கள் தற்போது மிகவும் சேதமடைந்துள்ளதால் பழைய தினசரி காய்கறி மற்றும் மளிகை கடைகளை அகற்றி புதிய கட்டிடம் கட்ட நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் துணைத்தலைவர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விரைவில் பழயை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டிடத்துக்கான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைகள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். 

    மார்க்கெட்டுக்கு செல்லும் வழி மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த மார்க்கெட் சந்தை தெரு விரிவாக்கம் செய்யப்படும் என்றனர்.
    நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது பாலு அந்த நிலத்தில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை பகுதியில் உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலம் அப்பகுதியில் உள்ளது.

    அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது பாலு அந்த நிலத்தில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார்.

    அது நன்கு வளர்ந்து சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.இந்த நிலையில் நீர் நில ஆக்கிரமிப்பு பயிர்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதனை அகற்றினர்.

    அப்போது பாலுவின் மனைவி பார்வதி நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுதார். அவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பார்வதி கூறும்போது ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இருந்தால் அந்த நெற்பயிரை அறுவடைக்கு வந்து இருக்கும். தற்போது பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது. பயிர்களைப் பயிரிட படாதபாடு படுகிறோம். எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறினார்.

    மேலும் முன் அறிவிப்பு இல்லாமல் பயிர்களை அழித்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அரசு சார்பாக 6 மாதத்திற்கு முன்பு அறிவிப்பை வழங்கி விட்டோம் என்றனர்.

    நெமிலி அருகே டிரான்ஸ்பார்மரை ஒன்றிய சேர்மன் வடிவேலு தொடங்கி வைத்தார்
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம், இலுப்பைத் தண்டலம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைத்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குளம் தூர்வாருதல் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயா மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்பவானி வடிவேலு, தனசேகரன், முஹம்மது அப்துல் ரஹ்மான், அரிகிருஷ்ணன், கோகுல்நாத், ஆனந்தன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்க கூடாது என கலெக்கடர் உத்தரவிட்டுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி மற்றும் ஜல்லிக் கற்கள் உடைக்கும் குவாரிகள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து குவாரி உரிமையாளர் களுடனான ஆய்வுக் கூட்டம்  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:&

    கல் குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்கக்கூடாது, வெடி வைப்பதும் கூடாது. ஜல்லிக் கற்கள் உடைக்கும் குவாரிகள் இயங்கலாம். குவாரிக ளிலிருந்து ஜல்லி உடைக்கும் குவாரிக்கு லாரிகள் மூலம் கற்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றி செல்லப்படுகிறது.

    இதனால் சாலை பழுது ஆகின்றது. மேலும் வேகமாக செல்வதால் சாலைகளில் இருந்து வழியில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.

    எம்சாண்ட் ஜல்லி கற்கள் தயாரிக்கும் குவாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றிச் செல்வதாகவும் புகார் வருகின்றது.

    மேலும் பாதுகாப்பின்றி லோடு ஏற்றிச் செல்லும்போது, தார்பாலின் மூடி எடுத்துச் செல்லப்படுவது இல்லை. இதனால் காற்றில் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீதும் நடந்து செல்வோர் மீதும் துகள்கள் விழுந்து விபத்து ஏற்படுகின்றது என கிராம மக்கள் அதிகளவில் புகார்கள் தெரிவிக்கின்றனர். 

    இதற்கு கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட அதிக கற்கள் ஏற்றக்கூடாது. ஜல்லி கற்கள் எடுத்துச் செல்லும் பொழுது தார்பாலின் மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். லாரிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். இதனை குவாரி உரிமையாளர்கள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

    அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனை உதாசீனப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவர் அவர் பேசினார்.

    இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, உதவி இயக்குநர் கனிமவளம் பெர்நாட், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், அனைத்து வட்டாட்சியர்கள். கல் குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டையில் சுதந்திர தின பெருவிழா கண்காட்சி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு நாள் விழா நடந்தது.

    இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    நம் நாட்டின் விடுதலைக்காக பல தலைவர்கள் பல போராட்டங்களை கண்டு அவர்களுடைய உயிரைத்தந்து நமக்கு விடுதலையை பெற்று தந்திருக்கின்றார்கள். அவர்கள் இல்லையேல் நாம் இன்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. 

    அதனை நாம் அனைவரும் உணர்ந்து நாட்டினை பாதுகாத்து, போட்டி, பொறாமையற்ற. சாதி மத பேதமற்ற, ஒரு முன்னேறுகின்ற தமிழகத்தையும், இந்தியாவையும் உருவாக்க வேண்டும்.

    மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினை சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக துவக்கி வைத்துள்ளார்கள். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இந்த கலை நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் உணர்ந்து ஒருமுறை தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் இல்லா ராணிப்பேட்டை என்ற நிலைய அடைய அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாநில, மாவட்ட சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

    இந்திய சுதந்திர வரலாறு குறித்த மாவட்ட அளவில் கல்லூரி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம். பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த 9 மாணவ மாணவிகளுக்கு பரிசும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்களும், பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்த துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷே.முஹம்மது அஸ்லம், நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா. டி.எஸ்.பி.பிரபு. திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை.வசந்தி ஆனந்தன், செயற்பொறியாளர், ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தஅசோக், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இராதா கண்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 448 ஆயுதப்படை போலீசார் பணியிட மாற்றம் செய்து வேலூர் டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங் களாக பிரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆயுதப்படை போலீசார் வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றி வந்தனர். இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான போலீசாரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். 

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 224 போலீசாரும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 224 போலீசாரும் மொத்தம் 448 பேர் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டு அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    இனி அந்தந்த மாவட்டங்களில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வது, பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை போலீசார் அழைத்து கொள்ளலாம். 

    இனிமேல் ஆயுதப்படை போலீசார் வேலூருக்கு சென்று மீண்டும் அங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
    சிப்காட் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள கத்தாரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 65). 

    இவரது மனைவி அம்சா (60). 2 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். லாலாப்பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் பைக்கில் கத்தாரி குப்பம் கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நெல்லிக்குப்பம் கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

    இதில் அம்சா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பரசுராமனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர் நகராட்சியில் வரி கட்டாமல் இருந்த 3 கடைகளுக்கு “சீல்” வைக்கப்படட்டது.
    சோளிங்கர்:

    ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, சொத்து வரி குடிநீர் கட்டணம், கடைகள், தினசரி மார்க்கெட், பஸ் நிலைய கடைகள் சுங்கம் மற்றும் குத்தகை உள்ளிட்ட வைக்கு கட்டவேண்டிய வாடகை மற்றும் வரி நீண்ட நாள் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. 

    இந்நிலையில் சோளிங்கர் பஸ் நிலையம், வாலாஜா ரோடு ஆகிய இடங்களில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் இளநிலை உதவியாளர்கள் எபினேசன், வெங்கடேசன், சரண்ராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வாடகை மற்றும் வரி கட்டாமல் உள்ள கடைகளில் வசூலில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சிக்கு சொந்தமான குறிஞ்சி காம்ப்ளக்சில் 3 கடைகள் நீண்ட நாட்களாக வாடகை மற்றும் வரி பாக்கி இருந்து வந்த நிலையில் இதனை தொடர்ந்து 3 கடைகளுக்கும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.
    சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொது பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கலா என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ள சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுவிற்கு பொதுப் பிரச்சினைகள் குறைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம். 

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற பேரவையின், 2021-22 -ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் விடுவதென முடிவு செய்துள்ளது. 

    இதனையொட்டி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபர், சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்/ மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும். 

    மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை இருத்தல் கூடாது.

    சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்கு உட்பட்ட மனுக்களை மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். 

    ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனோ மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். 

    அவ்வமயம் மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும். 

    இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
    ×