என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
    • அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை, மாலை 2 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் சாலையில் உள்ள முத்துக்கடை எஸ்.கே. மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.

    ராணிப்பேட்டையில் நடைபெறும் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    • நச்சு புகையால் பொதுமக்கள் அவதி
    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த தென்கடப்ப ந்தாங்கலிலிருந்து முசிறி செல்லும் சாலையில் கடந்த சில வருடங்களாக தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    தோல் தொழிற்சாலை, பேப்பர் தொழிற்சாலை ஆகியவற்றில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இந்த பாலி அலுமினியம் குளோரைடு ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை ராணிப்பேட்டையை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இங்கிருந்து கேன்களில் அனுப்பப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள 12 பெரிய அளவிலான பிளாஸ்டிக்டேங்குகளில் ரசாயனம் தேக்கி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரசாயணம் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டேங்க் திடீரென உடைப்பு ஏற்பட்டு ரசாயனம் கசிந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த வர்களுக்கு மூச்சுத் திணறல் ,கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டது மேலும் ரசாயனம் வெளியே றியதால் அப் பகுதியை சுற்றி பனிமூட்டம் போல் வென் புகை காணப்பட்டது.

    காவலாளி ஒருவருக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுபற்றி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டேங்கில் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர்.

    ரசாயனம் அருகில் முசிறி கிராம சாலையில் சென்றதால் அந்த வழியாக சென்றவ ர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனத்தின் வீரியத்தை குறைக்க அதன் மீது மண் கொட்டி மூடப்பட்டது. சம்பவ இடத்தை வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ரசாயனம் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை, இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தும் ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் போலீசார் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்ததில் போதைபொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

    மேலும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

    இதைபோல அவளூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சப்தகிரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போதைபொருட்கள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் வளர்மதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் இன்றைய கணினி உலகில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகள் அடங்கிய சிறப்பு செயலிகள் நீட், ஜே.இ.இ பாடங்கள் அடங்கிய மற்றும் இணைய வசதிகளுடன் உள்ள கையடக்க கணினி சமூக பங்களிப்பு நிதியில் வழங்கிட கலெக்டர் வளர்மதி நடவடிக்கை எடுத்தார்.

    அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அதிகம் பெற்ற 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜி அப்துல்மஹித் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்தது
    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த பிரசார ஊர்வலத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்று, ஊர்வலத்தில் கலந்து கொண்டு வி.சி.மோட்டூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், துணை அமைப்பாளர் சிவா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட தி.மு.க. வின் மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
    • சாலை விபத்தில் உயிரிழந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள புதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் இளங்கோ (29). இவர் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்கரராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 20-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற இளங்கோ பணி முடிந்தவுடன் நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது பனப்பாக்கம் பெருவளையம் சாலையில் விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து, போலீஸ்காரர் இளங்கோ வின் இறுதிச்ச டங்கு அவரது சொந்த ஊரான பாணாவரம் அடுத்த புதூரில் நேற்று நடந்தது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சற்குணன் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இளங்கோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் முன்னதாக காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர், இளங்கோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் பாய் (வயது 33). இவர் பைக்கில் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டி.வி.க்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக ஒரேபைக்கில் வந்த 3 வாலிபர்கள் ரிஸ்வானை கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 எல்.இ.டி டிவிக்களை பறித்துக்கொண்டு

    தப்பினர்.இதுகுறித்த காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரிஸ்வான் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மாமுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வரங்கம் மகன் சுஜித்(23) என்பவர் தனது 2 நன்பர்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் சுஜித்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

    • குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.

    கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு ஆகிய கிராமங்களில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.

    முகமூடி கொள்ளையர்கள் பற்றிய வீண் வதந்தியை நம்பவேண்டாம் மேலும் அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வர வேண்டும்.

    மேலும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    • கடன் தொல்லையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மாலை தீடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

    சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் வஜ்ஜிரவேல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூரில் இருந்து திருத்தணி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு வாலாஜாவில் எம்.பி.டி சாலையில் சென்றது பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி அருகே வந்த போது பஸ்சின் முன்பு ஹோல்ஸில் கரும்புகை வெளிவந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    இதை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் பஸ் டிரைவரிடம் கூறியுள்ளனர்.

    இதை தொடர்ந்து பஸ் டிரைவர் பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார்.

    பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பிடிக்காமல் இருக்க பஸ்சின் முன்பக்கத்தில் தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×