என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 152 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 139 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

    இதேபோல் அரிமளம் ஒன்றியம் நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயது பெண் கே.ராயவரம் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், கடையக்குடி அருகே உள்ள வலையன் வயல் கிராமத்தை சேர்ந்த 33 வயது ஆண், கடியாபட்டி போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த 49 வயது பெண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு நேற்று கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    இலுப்பூர் அருகே பலத்த மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டி மாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). விவசாயியான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். இந்த நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, திடீரென்று சிதம்பரத்தை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுபற்றி இருந்திராப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    ஆலங்குடி தாலுகா கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் அனுஜா (வயது 22). இவர் விராலிமலை அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று ஸ்கூட்டரில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல்பட்டி அருகே உள்ள பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த சையது இப்ராஹிம் (46) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 744 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

    அரிமளம் ஒன்றியத்தில் 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராயவரம் கிராமத்தை சேர்ந்த 80 வயது பெண், மேலதேமுத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், துறையூர் கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண், அரிமளம் பேரூராட்சி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 25 வயது பெண், அரிமளம் கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 74 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 70 வயது பெண் ஆகிய 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    அறந்தாங்கி

    காங்கிரஸ்

    ஆலங்குடி

    திமுக

    திருமயம்

    திமுக

    புதுக்கோட்டை

    திமுக

    விராலிமலை

    அதிமுக

    கந்தர்வக்கோட்டை

    கடும் போட்டி

    இறுதி சடங்கு காரியங்களை ஆண்களே செய்யக்கூடிய நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் பெண்களும் முன்வந்து செய்ய தொடங்கி உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது33). இவரது கணவர் விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட மகேஸ்வரி சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை மீட்டு பராமரிக்க நேசக்கரம் எனும் காப்பகம் ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார்.

    இதில் தற்போது 20-க்கும் மேற்பட்ட வயதானோர் உள்ளனர். காப்பகம் தொடங்கப்பட்ட நேரத்தில் புதுக்கோட்டை காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் திண்ணையில் ஆதரவற்று கிடந்த மூதாட்டியை மீட்டார். அவரது பெயர் வேதம் ஆகும். வாரிசுகள் எதுவும் கிடையாது. ஆதரவற்று கிடந்த மூதாட்டி வேதத்தை மகேஸ்வரி தனது காப்பகத்தில் பராமரித்து வந்தார். அவரது உறவினர்கள் காமராஜபுரம், கீரனூர் மற்றும் திருப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 95 வயதான வேதத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உறவினர்களுக்கு காப்பகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வேதம் இறந்தார். இது குறித்தும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை. தூரத்து உறவினர் என்ற பெயரில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு சேலையை மட்டும் எடுத்து கொடுத்து மரியாதை செய்துள்ளனர்.

    இறந்த மூதாட்டி வேதத்தின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்வதற்கு ஆள் இல்லாமல் போனதால் மகேஸ்வரி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்தனர். இறந்த மூதாட்டியின் உடலை குளிப்பாட்டி, சேலை, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை போஸ் நகரில் உள்ள மின்மயானத்தில் எரிக்க திட்டமிட்டனர். ஆனால் அவருக்கு அடையாள அட்டை இல்லாததால் அங்கு எரிக்க முடியாமல் போனது.

    இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்து அடப்பன்வயல் பகுதியில் சுடுகாட்டில் மூதாட்டியின் உடல் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கு மூதாட்டியின் உடலுக்கு கொள்ளி வைப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது. அந்த நேரத்தில் சமூக ஆர்வலரான மகேஸ்வரி தான் எரியூட்டுவதாக தெரிவித்து கொள்ளி வைத்தார். இறுதி சடங்கு காரியங்களை ஆண்களே செய்யக்கூடிய நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் பெண்களும் முன்வந்து செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் இறந்த மூதாட்டியின் உடலுக்கு பெண் இறுதி மரியாதை செலுத்தி உள்ளார்.

    கொரோனா வைரஸ்

    இது குறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது, "மூதாட்டி வேதம் இறந்தது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, கொரோனா அச்சம் காரணமாக வர மறுத்தனர். அதனால் மூதாட்டிக்கு இறுதி சடங்கு மரியாதையை நான் செய்தேன். எனது பராமரிப்பில் அவர் குழந்தை போல இருந்து வந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நான் இந்த இறுதி சடங்கு காரியத்தை செய்தேன். எனது செயலுக்கு குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். எனது சேவையை தொடர்ந்து செய்ய பாராட்டினர்" என்றார்.
    புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் காதலன் மற்றும் உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).

    இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது‌. அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் திருடு போயிருந்தது.

    கொள்ளையடித்துசென்ற அந்த நபர் லோகப்பிரியாவுக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இந்த கொலை தொடர்பாக உறவினர் ஒருவரிடம் விசாரணையை நடத்தினர். இதற்கிடையில் லோகப்பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உடனடியாக அந்த காதலனையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றனர். 

    புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். பழனியப்பன் இறந்துவிட்டார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். யாரோ மர்மநபர் வீட்டின் உள்ளே புகுந்து லோகப்பிரியாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பூலாங்குறிச்சி அருகே உள்ள செவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா (வயது 24). இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மணமேல்குடி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பொன்னையா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நேற்று மதியம் தனது அண்ணன் விஜயகுமாருடன் (27) தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இருவரும் செல்லுகுடி விளக்கு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரையும் வழி மறித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்ட தொடங்கினர். இதில் அரிவாள் வெட்டுடன் பொன்னையா வயலில் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    ஆனால் மர்ம நபர்களிடம் விஜயகுமார் வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து மர்மநபர்கள் பழைய முன்விரோதத்தை வைத்து அவரை கழுத்து, நெஞ்சு, தலை ஆகிய இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தம் சொட்ட,சொட்ட சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தப்பி ஓடிய பொன்னையா மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட தனது அண்ணன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனையடுத்து போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொன்னையா 2019-ம் ஆண்டு மணமேல்குடியை சேர்ந்த இசக்கிமுத்துவை வெட்டிக்கொலை செய்ததற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெட்டிக்கொலை செய்யப்பட்ட விஜயகுமார் சிங்கப்பூரில் 2 ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு சமீபத்தில்தான் ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டையில் பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஊரடங்கை பயன்படுத்தி மது விற்ற பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கந்தர்வகோட்டை:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அந்தவகையில் கந்தர்வகோட்டையில் மதுவிற்ற நாகராஜ் (வயது 23), கவிக்குயில்(35), அமுதா (28), சசிகலா (52), சசிகுமார் (38) ஆகிய 5 பேரை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்ற சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். ஆவூர் அருகே உள்ள குமரபட்டி பகுதியில் மது விற்றதாக வேல்முருகன் (40), சந்திரசேகர் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விராலிமலை புதிய பஸ் நிலையம் மற்றும் செட்டியபட்டி பகுதிகளில் மது விற்ற துரைராஜ் (50), பெருமாள் (45), சண்முகம்(56) ஆகிய 3 பேரை விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் கைது செய்தார். அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் வழியில் நரிக்குளம் அருகேயுள்ள தென்னந்தோப்பு பகுதியில் மது விற்ற பள்ளத்தி விடுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துரைராஜ் (42) என்பவரை வடகாடு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகேசன் கைது செய்தார். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஆவணம் கைகாட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பெட்டிக்கடையில் மது விற்ற கறம்பக்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகா கொடும்பாளூரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி புவனேஸ்வரி (வயது 54). இவர் கடந்த 22-ந் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த துறையூரை சேர்ந்த சல்மான்கான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து167 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 283 ஆக அதிகரித்து. கொரோனாவுக்கு தற்போது 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

    அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல, ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    ×