என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலுப்பூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்3 May 2021 4:17 PM GMT (Updated: 3 May 2021 4:17 PM GMT)
இலுப்பூர் அருகே பலத்த மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டி மாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). விவசாயியான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். இந்த நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, திடீரென்று சிதம்பரத்தை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி இருந்திராப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X