என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவில் பகுதியில் மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கார்வீன்ராஜ் ஜெகதீஸ்குமார் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைகாலில் இருந்து வந்த மினிலாரியை சோதனையிட்டதில் 32 பெட்டிகளில் 1500 மதுபாட்டில்கள் இருந்தன.
இதைத் தொடர்ந்து மினிலாரியை ஒட்டிவந்த காரைகாலை சேர்ந்த மணிவண்னண். (28). ராஜ்குமார்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தரங்கம்பாடி,ஏப்.2–
தரங்கம்பாடி அருகே தாழம்பேட்டை மீனவர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30). மீனவர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர் 2–வது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பாஸ்கரின் தாய் செல்லமாவுக்கும், மருமகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அவரது தாயை தள்ளிவிட்டதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து அறிந்த பாஸ்கரின் தம்பி ராஜா (28) அங்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜா கட்டையால் பாஸ்கரை தலையில் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பாஸ்கருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இது குறித்து அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் முருகவேள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி, ஏப்.1–
சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரகுமணி (வயது47). மீனவர்.
இவர் கடந்த 30–ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் நேற்று இரவு தொடுவாய் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மைய பழைய கட்டிடத்தின் முதல் தளத்தில் ரகுமணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதைக்கண்ட கிராம மக்கள் இதுகுறித்து அவரது மனைவி கலையரசியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கூறினார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ரகுமணி கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தம்பதியினரின் மகன் சபரிகிருஷ்ணன் (வயது26). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா - மோகன் ஆகியோரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 20.8.21 அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 10 நாட்களே இருக்கும் நிலையில், கடந்த 2021 ஜூலை 7-ந்தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ரேவதி, காதலனின் மரணத்தை தாங்க முடியாமல் மிக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். பின்னர் மனதை தேற்றிக்கொண்ட ரேவதி மகனை இழந்து வாடும் தனது காதலனின் வயதான தாய், தந்தையின் நிலைமையை நினைத்து வேதனையடைந்தார்.
இதையடுத்து அவர்களோடு சேர்ந்து வாழ முடிவெடுத்த அவர் தனது வயதான மாமியார், மாமனாருக்கு பணிவிடைகள் செய்து அவர்களை பாதுகாக்கும் முடிவோடு காதலனின் வீட்டிற்கு சென்றார். திருமணமே ஆகவில்லை. ஆனால் மருமகளாகவே நினைத்து வீட்டிற்கு வந்து தங்கி வயதான தங்களுக்கு தனது பெற்றோர் போல் நினைத்து பணிவிடைகள் செய்யப்போகிறேன் என்ற ரேவதியை பார்த்து சபரி கிருஷ்ணனின் பெற்றோர் கைகூப்பி கண் கலங்கினர்.
இதையடுத்து கடந்த 11 மாதங்களாக தனது காதலன் நினைவுகளை மட்டும் சுமந்து மாமனார், மாமியாருக்கு அனைத்து பணிவிடைகளையும் ரேவதி செய்து வருகிறார்.
மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவோடு நாங்கள் எங்கள் மருமகளை பார்க்கிறோம் என கண்ணீர் மல்க கோவிந்தராஜ் - பத்மாவதி கூறினர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சபரி கிருஷ்ணனின் தந்தை கோவிந்தராஜ், கூலி வேலைக்கு செல்லும் அவருடைய சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரி கிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்.
தற்போது கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், சபரி கிருஷ்ணன் இறப்பிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறிய மின்வாரிய அலுவலர்கள் 8 மாதங்களாகியும் கண்டுகொள்ளவில்லை என்று சபரி கிருஷ்ணனின் சகோதரர் வேதனை தெரிவித்தார்.






