என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே மீனவர் மர்மசாவு: போலீசார் விசாரணை
சீர்காழி அருகே மீனவர் ஒருவர் மர்மமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி, ஏப்.1–
சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரகுமணி (வயது47). மீனவர்.
இவர் கடந்த 30–ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் நேற்று இரவு தொடுவாய் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மைய பழைய கட்டிடத்தின் முதல் தளத்தில் ரகுமணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதைக்கண்ட கிராம மக்கள் இதுகுறித்து அவரது மனைவி கலையரசியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கூறினார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ரகுமணி கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






