என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட சிங்காரவேலு.
    X
    கைது செய்யப்பட்ட சிங்காரவேலு.

    மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

    நாகூர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது ெசய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம், நாகூர் காவல் சரகம், கடம்பங்குடி கிராமம், அக்ரகாரத் தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் சிங்காரு (எ) சிங்காரவேல் (வயது53).

    சின்னப்பாவுக்கு 4 பெண் குழந்தைகள். முதல் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3வது மகள் ஐஸ்வர்யா கடந்து ஒரு வருடம் முன்பு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாகவும், அதற்கு தன் மனைவி முத்துலெட்சுமி (48) தான் காரணம் என கூறி சிங்காரவேல்குடி போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சிங்காரவேல் குடிபோதையில், வீட்டு அருகே வழக்கம் போல் முத்துலெட்சுமியிடம் தகராறு செய்தபோது ஆத்திரமடைந்து மூங்கில் கம்பால் தலையில் அடித்துள்ளார், இதை பார்த்த, முத்துலெட்சுமியின் மூத்த மகள் ஹேமலதா (26) தடுத்துள்ளார். 

    ஆனால் சிங்காரவேல் தனது மகள் ஹேமலதாவை கீழே தள்ளிவிட்டு விட்டு, முத்துலெட்சுமியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.சம்பவம் குறித்து அறிந்த நாகூர் வட்ட ஆய்வாளர் சிவராமன் முத்துலெட்சுமியின் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.

    திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் சரகம் சோழங்கநல்லூரில் பதுங்கியிருந்த மேற்படி சிங்காரு (எ) சிங்காரவேலை நாகூர் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×