search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student attempted suicide"

    • கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
    • வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வேலு (வயது15). இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வேலு 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேலு சாணிப்பவுடர் மற்றும் அரளி விதையை அைரத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வேலுவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி யில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இந்த முடிவில் பிரியதர்ஷினி எதிர்பா ர்த்தபடி அவருக்கு மதி ப்பெண்கள் கிடைக்கவி ல்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்ப ட்டார்.

    வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணி ப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பிரியதர்ஷினியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    வேதாரண்யம் அருகே ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாத வேதனையில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பார்வதி. இதில் கிருஷ்ணமூர்த்தி மாற்றுதிறனாளி. பார்வதி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்திகா (வயது 21).

    பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் கீர்த்திகா ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார். பிளஸ்-2 முடித்து விட்டு டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட கீர்த்திகாவுக்கு மருத்துவ படிப்பில் சேர போதிய பணம் இல்லை. இதனால் மகளின் லட்சிய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என கவலைபட்ட பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தனர்.

    அங்கு 2 ஆண்டுகள் படித்த கீர்த்திகா மேற்கொண்டு படிப்பை தொடர பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினார். தனது பெற்றோரிடம் எப்படியாவது டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என கூறிவந்தார்.

    இதனால் மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோரும் பல இடங்களில் பணம் கேட்டு பார்த்தனர். மேலும் வங்கியில் கடன் கேட்டும் கொடுக்கவில்லை.

    இதனால் தன்னால் டாக்டராகாமல் போய் விடுமோ என எண்ணி மனமுடைந்த மாணவி கீர்த்திகா வீட்டில் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    தனது மகள் படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என கீர்த்திகாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×