என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழாவில் தியாகராஜ சுவாமி பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில், மாசிமகத் திருவிழாவை யொட்டி தியாகராஜசுவாமி பாத தரிசனம் கொடுத்து இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஹம்சநடன புவனி விடங்க தியாகராஜசுவாமி தேரில் வீதியுலா வந்த பிறகு வசந்த மண்டபம் எழுந்தருளி அதன் பிறகு நேற்று வசந்த மண்டபத்திலிருந்து பாத தரிசனம் அளித்து புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆஸ்தான வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலிய்பபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சியில் மும்முரமான வாக்குப்பதிவு, வரிசையில் நின்று வாக்காளர்கள் கடமை ஆற்றினார்கள்
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகை நகராட்சியிலுள்ள 36 வார்டு களில் 1 வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
     
    இந்நிலையில் 35 வார்டு களுக்கு 84 வாக்குச்சாவடி மையங்களிலும், வேதாரண்யம் நகராட்சியிலுள்ள 21 வார்டுகளுக்கு 36 வாக்குச்சாவடி மையங் களிலும, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகளுக்கும் 60 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தமாக 184 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் அதனை சரிபார்த்து தயார் நிலையில் வைத்தனர்.
     
    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

    அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய 4 பேருராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 70908பேரும், பெண் வாக்காளர்கள் 76589 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 499 வாக்காளர்கள் உள்ளனர். 

    நாகை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 184 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
     
    நாகை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள் கருதப்படும் 59 வாக்கு சாவடி மையங்களில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு  தேர்தல் வாக்கு காலை 7 மணிக்கு தொடங்கியது. இவை  மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு 36 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அமைதியான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது 

    சில வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே ஆர்வமாக வாக்காளர்கள் வாக்களித்தனர் வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி  வசதி செய்யப்பட்டுள்ளது . குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

    மேலும் வாக்குசாவடி வரும்  வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீர்காழி டிஎஸ்பி  லாமெக்  தலைமையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  போலீஸ் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழாவில் பூத கணங்களுடன் கல்யாணசுந்தரர் வீதியுலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று கோவில் வளாகத்தில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் கல்யாணசுந்தரர் பூத கணங்களுடன் எழுந்தருளினார்.

    பின்னர் வாணவேடிக்கையுடன் அலங்கார நான்கு சக்கர வாகனத்தில் வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. 

    மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ச்சியாக நாளை பூதகணங்களின் உதவியோடு நெல் மலையை ஆரூர்&க்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு 29.1.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 
    திருவிழாவின் ஒரு பகுதியாக மாசி மகத்தையொட்டி சந்திரசேகர சுவாமி பெரிய வெள்ளிரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து சன்னதி கடல் என்னும் வேதநதி கடற்கரை சென்றடைந்து அங்கு அஸ்த்ர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபட்டனர். பின்பு சுவாமி நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தினர், பஞ்சாயத்தார்கள் கூடி சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டனர். 

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஆறுகாட்டுத்துறை கிராம 
    பஞ்சாயத்தார் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசாரி பலியானார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சி, அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வந்தார். 
    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

     நெய்விளக்கு நால்ரோடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.
    இது குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் கடற்கரை பூங்காவில் இறந்த கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம்-3ம் சேத்தி கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). சலவைத் தொழிலாளி. 
    இவர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு கீழவெளி பகுதியில் தனது மகள் வீட்டில் வந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 16ம் தேதி கடைவீதிக்கு சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லையாம். 17ம் தேதி வயதானவர் கடற்கரை பூங்கா அருகே இறந்து கிடப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

    சுப்பிரமணியன் மனைவி கனகவள்ளி (45) மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இறந்தவர் தனது கணவர்தான் என உறுதி அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவரது மனைவி புவனேஸ்வரி (45).

    இவர்களுக்கு தனலெட்சுமி (22), வினோதினி (19), அட்சயா (17) ஆகிய மூன்று மகள்கள். இதில் வினோதினி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அட்சயா பிளஸ்-2 படித்து வந்தார்.

    லெட்சுமணன் வீட்டின் வாசலிலேயே டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது மூத்த மகள் தனலெட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் லேப்பில் பணிபுரிந்து வந்தபோது மாற்று மதத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறி உள்ளது.

    இதற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தனலெட்சுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பெரும் மன உளைச்சலில் லெட்சுமணன் இருந்து வந்துள்ளார். மூத்த மகளின் நடவடிக்கையால் மற்ற 2 மகள்களின் வாழ்க்கை பாழாகி விட்டதே, குடும்ப கவுரவம் போய்விட்டதே என்று அருகில் உள்ளவரிடம் புலம்பி வந்தாக கூறப்படுகிறது.

    லெட்சுமணன் தினமும் காலை 4 மணிக்கு டீக்கடையை திறந்து விடுவது வழக்கம். அப்போது மகள் அட்சயா வாசல் கூட்டி கோலம் போடுவாராம்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி வரை டீக்கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது புவனேஸ்வரி அவரது மகள்கள் வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

    அருகில் லெட்சுமணன் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் போலீசார் புதுச்சேரி கிராமத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது நடத்திய முதல்கட்ட விசாரணையில் லெட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை தூங்கிக் கொண்டிருந்தபோது கிரைண்டர் குழவி கல்லால் தலையிலும், நெஞ்சிலும் தாக்கி கொலை செய்து விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில் மூத்த மகள் தனலெட்சுமி மாற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடியதால் மனவேதனையுடன் இருந்து வந்த லெட்சுமணன் விரக்தியிலும், ஆத்திரத்திலும் தனது மற்ற 2 மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கீழ்வேளூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை அடித்து கொன்றுவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அப்பகுதியில் கிராம மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    திருக்குவளை அருகே காருகுடி மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை&கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம்.

    அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. 

    தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தில் பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. உள்ளிட்ட 3 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நாகை புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கைங்கர்ய சபாவின் தலைவராக உள்ளார். புத்தூர் பகுதி வி.ஏ.ஓ. செல்வம். 

    இவர் புத்தூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை கடந்த 2020-ம் ஆண்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்தார்.

    பின்னர் அந்த இடத்தை தனது சகோதரர் தினகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்தார். 
    இதை அறிந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கைங்கர்ய சபா தலைவர் சண்முகம், கோயில் இடத்தை மீட்டுத்தரக்கோரி நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த 13-ம் தேதி புகார் செய்தார்.

    இதன் பேரில் போலீசார் போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. செல்வம், அவரது தாய் மலர்க்கொடி, சகோதரர் தினகரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பரவை காய்கறி சந்தை அமைந்துள்ளது. 

    பழமை வாய்ந்த இக்காய்கறி சந்தையில் உள்ளூரை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் என, அதிக விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பரவை காய்கறி சந்தை அருகாமையில் உள்ள தனியார் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தனியார் இடத்தில் காய்கறி சந்தை இயங்கி வருவதால் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.15 லட்சம் வருவாயும், அதன் மூலமாக ஊராட்சி மன்றத்திற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வருவாயும் கிடைக்காமல் இருப்பதாக கூறி, மீண்டும் பரவை காய்கறி சந்தையை அதே இடத்தில் கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    நாகை அருகே பண்ணையில் வளர்க்கப்படும் நாய்கள் ஆடுகளை கொன்று வருவதாக இறந்த ஆடுகளுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூரில் ஒருவர் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் சுமார் 250 நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் அந்த இடத்திலிருந்து நாய்கள் பாதுகாப்பு இல்லாமல் பண்ணையை சுற்றி உள்ள வீடுகளில் வளர்க்கக்கூடிய ஆடுகளை கொன்று விடுவதாகவும், பொதுமக்களையும் கடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இது சம்பந்தமாக அந்த நாய் பண்ணையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த பகுதி பொதுமக்கள் பிரதாபராமபுரத்தில் வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி செல்லும் கடற்கரைச் சாலையில் நாய் கடித்து இறந்த ஆட்டுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்தில் நாய் பண்ணையை அப்புறப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. 
    இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
    நாகப்பட்டினம்:

    வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்உத்தரவின்பேரில் நாகை உட்கோட்டம் திட்டச்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப்கென்னடி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தாலுகா போலீஸ் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என 200 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
    ×