என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகராஜசுவாமி
தியாகராஜ சுவாமி பாத தரிசன நிகழ்ச்சி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழாவில் தியாகராஜ சுவாமி பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் கோவிலில், மாசிமகத் திருவிழாவை யொட்டி தியாகராஜசுவாமி பாத தரிசனம் கொடுத்து இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஹம்சநடன புவனி விடங்க தியாகராஜசுவாமி தேரில் வீதியுலா வந்த பிறகு வசந்த மண்டபம் எழுந்தருளி அதன் பிறகு நேற்று வசந்த மண்டபத்திலிருந்து பாத தரிசனம் அளித்து புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆஸ்தான வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலிய்பபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






