என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தில் பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

    நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தில் பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. உள்ளிட்ட 3 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நாகை புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கைங்கர்ய சபாவின் தலைவராக உள்ளார். புத்தூர் பகுதி வி.ஏ.ஓ. செல்வம். 

    இவர் புத்தூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை கடந்த 2020-ம் ஆண்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்தார்.

    பின்னர் அந்த இடத்தை தனது சகோதரர் தினகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்தார். 
    இதை அறிந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கைங்கர்ய சபா தலைவர் சண்முகம், கோயில் இடத்தை மீட்டுத்தரக்கோரி நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த 13-ம் தேதி புகார் செய்தார்.

    இதன் பேரில் போலீசார் போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. செல்வம், அவரது தாய் மலர்க்கொடி, சகோதரர் தினகரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×