என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம்
    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

    திருவட்டார் :

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சமுதாய அளவி லான புற்று நோய் கண்டறி யும் திட்ட தொடக்க விழா குமரி மாவட்டம் பொன்மனை பேருராட்சி யில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    சமூக அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முதன் முறையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படு கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும்.

    தமிழ்நாடு புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் 2017-ம் ஆண்டு நடத்திய மாநில அளவிலான ஆய்வில் 69,517 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் 12-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் 14.6 சதவீதம் பேர் வாய் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், பெண்களின் 33.6 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    18 வயது நிரம்பிய ஆண்களும் பெண்களும் வாய் பகுதி புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனையையும்,30 வயது நிறைவு பெற்ற பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனை எளிதில் வலியின்றி விரை வாக செய்து முடிக்கப்படும். எனவே நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டமானது செயல் படுத்தப்படுகிறது.

    மாவட்டந்தோறும் இல்லங்கள் தேடி பணியாளர்கள் வந்து ஒரு அழைப்பிதழ் வழங்கு வார்கள். இந்த அழைப்பிதழில் உங்களுக்கு அருகாமையில் உள்ள புற்று நோய் கண்டறியும் மையத்தில் உள்ள விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அழைப்பி தழை அந்த மையங்க ளுக்கு எடுத்துச் சென்றால் உங்களுக்கு புற்றுநோய் அறிகுறி உள்ளதா என்று பணியாளர்கள் பரிசோதனை செய் வார்கள். தொற்று நோய் அதிக ரித்து வரும் கால கட்டங்களில் நம்மை காத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

    எனவே இந்த நோய் தொற்று ஏற்படாமல் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் விஜய்வசந்த் எம்.பி., பொன்மனை பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, ஊராட்சி மன்ற தலை வர்கள் விமலா சுரேஷ் (சுருளோடு), லில்லி பாய் சாந்தப்பன் (பாலமோர்), பொன்.ரவி (திற்பரப்பு), துணைத் தலைவர் ஸ்டா லின் தாஸ், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக் டர் .மீனாட்சி, இணை இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ், மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர், சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், ஆய்வாளர் சுரேஷ்குமார், மருத்துவ பணி யாளர்கள், சுகா தார ஆய்வாளர்கள் செவிலி யர்கள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.
    • முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. தனது நிறுவன சமூக பொறுப்பின் கீழ் பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட தேவிகோடு சி.எஸ்.ஐ சமூகநலக் கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.

    முகாமை தேவிகோடு சி.எஸ்.ஜ. சேகரசபை போதகர் ஜஸ்டஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் மற்றும் ஐ.ஆர்.இ. துணைப்பொது மேலாளர் (சுரங்கம் மற்றும் வள ஆதாரங்கள்) சிவராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தை கண்நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 225 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், ஐ.ஆர்.இ. நிறுவன அதிகாரிகள், தேவிகோடு சி.எஸ்.ஐ.சேகரசபை செயலாளர் சாலமன் பால், உதவி போதகர் ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்து தர்ம பேரவை தமிழக அரசுக்கு மனு
    • ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை

    இரணியல் :

    குமரி மாவட்டம் வில்லுகுறி அருகே மாம்பழத்துறையாறு அணையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலச்சுவடி என்னும் பகுதியில் 164 சென்ட் நிலப்பரப்பில் மலையாண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் இப்போது அறநிலையத்துறையை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.

    மிகவும் பழமையான இந்தக் கோவில் மற்றும் கோபுரங்கள் இடியும் தருவாயில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வழிவகைகள் செய்து தர வேண்டும். மேலும் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் இருந்தால் அதையும் மீட்டு எடுக்க வேண்டும் என ஹிந்து தர்ம பேரவை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் மனு அனுப்பி உள்ளது.

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார்.
    • மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மார்த்தாண்டம் :

    வில்லுண்ணிக்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 44-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவகலா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சேம் பிரின்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார். திருவட்டார் யூனியன் சேர்மன் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனு, முன்னாள் மாணவர் சோழராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.சிந்து குமார் பரிசு வழங்கினார்.தமிழ் ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியை லிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    நாகர்கோவில், நவ.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024- ம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8-ல் உலக முத லீட்டாளர் கள் மாநாட்டை நடத்த திட்ட மிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உலக முத லீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட் டத்திற்கு முதலீடு களை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து நடை முறைப்படுத்த அனைத்து குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இதன்படி ரூ.99 லட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப் புள்ள தொழிற் சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப் பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள் வணிக செயல் பாட்டாளர்கள் www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்ட தொழில் மையத் தில் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 குறித்த அைனத்து விபரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம் தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில் 4 அலுவலகத்தை நேரிேலா அல்லது தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • 2-ம் திருவிழாவான நாளை காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.
    • பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகானந்தகேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது. இங்கு பவித்ர உற்சவம் திருவிழா இன்று தொடங்கியது இந்த திருவிழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இன்று காலையில் ஆச்சாரிய வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு அங்குரா அர்ப்பனம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் திருவிழாவான நாளை (23-ந்தேதி) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.

    4-ம் திருவிழாவான 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு பவித்ர உற்சவம் நடக்கிறது. அப்போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது.

    பவித்திர உற்சவ திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மின் விளக்கு அலங்கா ரத்தில் ஜொலிக்கிறது. பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னை யில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துணை செயல்அலுவலர் விஜயகுமார், கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேம தர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • தலைமை ஆசிரியர் உமாநாதன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    நாகர்கோவில், நவ.22-

    கன்னியாகுமரி டேக்வாண்டோ அகடாமி சார்பில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இதில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியை சேர்ந்த ருஷ்வந்த் குமார், கிருத்திகா, அஸ்லி பிளசிங், சுகேஷ், அஸ்வின் குமார் போன்றவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களை அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் நிஷா, வனிஷா, விஜி, அஜிதா, தலைமை ஆசிரியர் உமாநாதன், துணை தலைமை ஆசிரியர் மதிமகாதேவன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    • குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள திருநெல்வேலி கோட்ட பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தியை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மக்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும், மருத்துவமனைகளுக்கு செல்லவும், அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். மக்கள்தொகை பெருகி வருவதால் இப்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஆகையால் அனைத்து ஊர்களில் இருந்தும் நாகர்கோவில் செல்லவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் தேவை.

    ஏராளமான வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துக்குள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய கேட்டுகொண்டார். கடற்கரை கிராமங்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையோடு இணைக்கும் வகையில் புதிய பேருந்துக்களின் தேவையை விளக்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, ஆர்.சி.சி., ஸ்ரீ சித்திரை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை தேடி செல்கின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்கள் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துங்கள் பழுதடைந்த நிலையில் சாலைகளில் பயணிக்கிறது. அதற்கு பதிலாக நல்ல நிலையில் இயங்கும் பேருந்துங்கள் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் “மகா தீபம்” ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான வருகிற 26-ந்தேதி கார்த்தி கை தீபத்திருவிழா கொண் டாடப்பட உள்ளது.

    இதை யொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியா குமரி அருகே பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்து உள்ள குமரியின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில் களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 26-ந் தேதி காலை பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கமும், அன்னதானமும் நடக்கிறது. மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும். 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண் கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திரு விழாவை கொண்டாடு வார்கள். வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கி றது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் நடந்தது
    • போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுத்தனர். 35 மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 42 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மதியழகன், சுப்பையா மற்றும் டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், உதயசூரியன், சந்திரசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    • காரணம் என்ன? போலீசார் விசாரணை
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை :

    கொல்லங்கோடு அருகே உள்ள அம்மந்தலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவரது மகன் ரெஜின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் நித்திரவிளை அருகே கொல்லால் புன்னமடை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள பாறை குளத்தில் ரெஜின்ராஜ் வளர்ப்பு மீன்கள் வளர்த்து வந்தார். இந்த குளத்தை சுற்றி கம்பியால் ஆன வேலியும், மேல் பகுதியில் வலையும் போட்டுள்ளார்.

    இன்று காலை தேவராஜ், மீன்களுக்கு தீனி போட சென்றார். அப்போது குளத்தில் சுமார் 200-க்கும் அதிகமான மீன்கள் செத்து மிதந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் விஷ உணவுகளை வீசியதில் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×