என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆயுத ப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன புதிய கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். குழந்தை களை கவரும் வகையில் நவீன வசதிகளுடன் குளி ரூட்டப்பட்ட வகுப்ப றைக ளுடன் மழலையர் பள்ளிக்க ட்டிடம் அமைந்துள்ளது.

    தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில், பள்ளி தாளாளர் சனில் ஜாண், துணை தாளாளர் ஜார்ஜ் கண்டத்தில், பள்ளி முதல்வர் லிஸ்பெத், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர் சந்திரபோஸ், மேல்நி லைப்பள்ளி ஒருங்கி ணைப்பாளர் ராஜையன், துணை முதல்வர் பிரே ம்கலா, தலைமையாசிரியை மோனிக்கா ஸ்பினோலா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.

    100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது மழலையர் பள்ளி (பிரி-கேஜி) சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    • 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    அருமனை அருகே உள்ள இடைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கணவரை இழந்த 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ஜோஸ்பின் ஷீபா, தனது மகள் ஆஷீகா (8)வுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அருமனை போலீசில் வில்சன் புகார் செய்தார். அதில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜினு என்பவருடன் ஜோஸ்பின் ஷீபா இருப்பதாகவும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் குறிப்பி ட்டு உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், குழந்தைகளுடன் மாயமான ஜோஸ்பின் ஷீபாவை, போலீசார் மலப்புரத்தில் இருந்தே அழைத்து வந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.
    • பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    நாகர்கோவில் :

    தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு கல்வி அமைச்ச கத்தின் மூலம் "கலா உத்சவ் " என்ற கலைப் பண்பாட்டுத் திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்த ப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில் நாகர்கோவில், சுங்கா ன்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். சேல த்தில் நடைபெற்ற மாநில அளவிலான பரத நாட்டியப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றார்.

    மாநில அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நடுவர்கள் பவானி. தனசுந்தரி மற்றும் ஸ்ரீமஜா ஆகியோர் முன்னிலையில் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.

    மாநில போட்டியில் வென்றதன் மூலம் ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெறும் தேசிய அள விலான போட்டியில் தமி ழ்நாடு பள்ளிக் கல்வித்து றை சார்பில் அதிதி சந்திர சேகர் பங்கேற்க உள்ளார்.சாதனை படைத்த மாணவி அதிதி சந்திரசேகரை பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    • கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது
    • இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    குளச்சல் :

    குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர் பயணி கள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் உணவருந்தி வருகின்றனர். இன்று காமராஜர் சாலையை சேர்ந்த சேவியர் (வயது 57) தனதுமனைவி மல்லிகா (52)வுடன் அம்மா உணவகத்தில் டிபன் சாப்பிட்டு கொண்டி ருந்தார்.

    அப்போது உணவகத்தின் மேற்கூரையின் பால் சீலிங் திடீரென உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாய மடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டார்.உடைந்து விழுந்த கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    • நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், அமைப்பு செய லாளருமான தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. வெளியி ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதா வது:-கள்ளம், கபடமின்றி அனைவரிடத்திலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி, இருப்பதை கொடுத்து இன்முகத்தோடு நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பா ர்கள். மீனவ சமுதாயம் பொருள் இல்லாத வர்க ளுக்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும், பசித்தவர்களுக்கு உண்ண உணவினையும் எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவும் ஈகை நிரம்பிய குணம் கொண்ட சமுதாயம் மீனவ சமுதாயம்.

    உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் மாதம் 21-ந்தேதி அன்று மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 7515 கிலோ மீட்டர் நீள முள்ள கடற்கரையில், சுமார் 1076 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டு ள்ளது தமிழ்நாடு.

    மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், மீனவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், அவர்களின் உள்ளம் மகிழவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து க்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    திருவட்டார், நவ.20-

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்றத்தலைவர் இசையாஸ், மாவட்ட நிர்வாகிகள் ஆற்றூர் குமார், ஜாண் இக்னேசியஸ், பென்னட், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜன், கண்ணனூர் ஜோண், ஆற்றூர் ஜாண் வெர்ஜின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • 15 அணிகள் கலந்து கொண்டன
    • போட்டியில் முதலிடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி பெற்றது

    மார்த்தாண்டம் :

    கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடை பெற்றது. போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டன. இதன் நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. துணை உடற்க ல்வித்துறை இயக்குனர் பி.அனுஷா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னராக மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் கன்வீனர் ஜான் ரஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் முதலி டத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் கலைக்கல்லூ ரியும், 2-வது இடத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியும், 3-வது இடத்தை சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியும், 4-வது இடத்தை அம்பை ஆர்ட்ஸ் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புனித அல்போன்சா கல்லூரி தாளா ளர் மற்றும் செய லாளர் அருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோக்கிய சாமி, கல்லூரி வளாக வழிகாட்டி அருட்ப ணியாளர் அஜின்ஜோஸ், துணை முதல்வர் ஆர்.சிவனேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    • பாரபட்சம் காட்டப்படுவதாக பயணிகள் புகார்
    • 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகள், சுற்றுலா பயணிகள் வரும் ரெயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்று மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதைகள் தற்போது ரெயில்கள் இயங்கும் பழைய இருப்பு பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வேண்டி வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி-நாகர்கோவில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரெயில்கள் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரெயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரெயில் 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரெயில் இரு மார்க்கங்களிலும் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4-ந் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களுர்-கன்னியாகுமரி (எண் 16526) ரெயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்-கன்னியாகுமரி வரை பகுதியாக 8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்-கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாகவும் இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-புனலூர் ரெயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி-கன்னியாகுமரி ரெயில் திருநெல்வேலி-– கன்னியாகுமரி இடையே 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி ரெயில் 27-ந் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஹவுரா-கன்னியாகுமரி ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 27-ந் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி-– நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-கத்ரா ரெயில் டிசம்பர் 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் 3-ந் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரெயில் 3-ந் தேதி பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலிருந்து புறப்படும். நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரெயில் வருகிற 2-ந் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் ஒரு நாள் மட்டும் 4-ந் தேதி பகுதியாக திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். கன்னியாகுமரி- புனே ரெயில் 4-ம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அறிவித்து இயக்காத காரணத்தால் சாதாரண மக்கள் தங்கள் பயணங்களை குறிப்பாக சென்னைக்கு பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பாக ரெயில்வே துறை திடீரென ரெயில்களை பகுதியாகவோ அல்லது முழு ரெயிலும் ரத்து என அறிவிப்பு செய்வது, முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேண்டும் என்றே மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் ரெயில்களில், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய 3 ரெயில்களும் திருநெல்வேலியுடன் ஒருநாள் நிறுத்தப்படுகின்றது. இந்த ரெயில்களில் குமரி மாவட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும் இங்கிருந்து தங்கள் மாநில தலைநகர் சென்னைக்கும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    கேரளா மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களான கன்னியாகுமரி – புனே, கன்னியாகுமரி-பெங்களுர், கன்னியாகுமரி-திப்ருகார், புனலூர்-நாகர்கோவில் ஆகிய ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி வைத்து விட்டு தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய 2ரெயில்களையும் நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து செய்வதில் அதிக அளவில் ரெயில்கள் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 4-ம் தேதி திங்கட்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படும் நாகர்கோவில் -ஷாலிமார் ரெயில் திருவனந்தபுரத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ரெயில்களை பகுதியாக ரத்து செய்வதற்கு முன்பு அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ெரயில்களை ரத்து செய்யாமல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களை முதலில் ரத்து செய்துவிட்டு பின்னர் இடபற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்த ரெயில்களை ரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ெரயில்கள் ஒரே ஒரு ெரயில் ஒரே ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் படியாக மூன்று ெரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பாரபட்சமானது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்து செய்யப்படும் ரெயில்களில் அதிக அளவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீகத்துக்கு என்று செல்லும் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தனியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வரும் கால அட்டவணையை வைத்து கன்னியாகுமரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய ரெயில்கள் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள நாட்களில் சென்னையிலிருந்து இந்த ரெயில்களில் திருநெல்வேலி வரும் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லத்தக்க வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து இன்னமும் தொடர்ந்து வர இருக்கிறது. அடுத்த மாதம் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். இது முடிந்த பிறகு திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் இவ்வாறு பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. கடைசியாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2 ஆலய மணிகளும் இன்று முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது

    இரணியல் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, தோட்டி யோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்.

    உலகிலேயே புனிதராக அறி விக்கும் முன்பே சிறுமலர் தெரேசா வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு மே 17-ந்தேதி சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

    புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேர ருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. கண்டன் விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் உள்ள இந்த 2 ஆலய மணிகளும் இன்று (20-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 ஆலய மணிகளில் ஒன்றில் புனித தெரேசா உருவப்படமும், மற்றொன்றில் திருச்சிலுவையும் பொறிக் கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆலய மணியில் "புனித தெரேசாவாகிய நான் இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களையும் கண்டன்விளைக்கு அழைப்பேன்" என ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. கண்டன்விளை ஆலய மணி கோபுரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டி ருந்த இந்த 2 ஆலய மணிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருப்பலி நாட்களில் ஒரு ஆலய மணியும், திருவிழா காலங்கள் மற்றும் சிறப்பு திருப்பலி வேளைகளில் 2 மணிகளும் ஒலிக்கப்படும்.தற்போது இந்த 2 ஆலய மணிகளும் பராமரிப்பு பணி களுக்காக கீழே இறக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஆலய மணிகள் என்பதால் இவற்றை பார்வையிட பங்குமக்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த 2 ஆலய மணிகளும் பக்தர்கள் பார்வைக்காக 3 நாட்கள் வைக்கப்படுகிறது. ஆலயம் மற்றும் ஆலய மணி குறித்த ஆய்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த 2 ஆலய மணிகளும் 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை மற்றும் மெழுகுவர்த்தியுடன் வந்து ஆலய மணியை பார்வையிட்டு வழிபட்டு செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ், பங்குப்பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    • 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. பூதப்பாண்டி, சிவலோகம், கன்னிமார், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு என அனைத்து பகுதிகளி லும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மதகுகள் வழியாக 503 கன அடி தண்ணீரும், உபரிநீராக 107 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 73.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 707 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணைக்கு 190 கன அடி நீர்வரத்து உள்ளதால் மதகுகள் வழியாக 100 கன அடியும், உபரிநீராக 129 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன.

    இதனால் இந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்ப டுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாறு, பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. எனவே அங்கு கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 15.4, பெருஞ்சாணி 22, சிற்றார் 1-15.8, சிற்றார் 2-17.8, களியல் 12.2, கொட்டாரம் 26.4, குழித்துறை 10, மயிலாடி 26.2, புத்தன அணை 17.8, தக்கலை 23.2, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.4, அடையாமடை 8, முள்ளங்கினாவிளை 29, ஆணைக்கிடங்கு 17.6, முக்கடல் 15.6, பூதப்பாண்டி 10.2, நாகர்கோவில் 23.4, ஆரல்வாய்மொழி 16.2.

    • 1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 74). மாற்றுத்திறனாளி. இவரது சகோதரி செல்வி, குளச்சல் கீழ்நிரவுவிளையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்ரமணியனுக்கு திருமணம் ஆகாததால் தினமும் காலை அவருக்கு சகோதரி செல்வி உணவு கொண்டு கொடுப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று உணவு கொண்டு வந்தபோது சுப்ரமணியனை காணவில்லை. சுப்ரமணியன் அவ்வப்போது காணாமல் சென்று விட்டு பின்னர் சில நாட்களில் திரும்பி வந்து விடுவாராம். இதனால் வழக்கம் போல திரும்பி வருவார் என செல்வி இருந்துள்ளார். ஆனால் 1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த செல்வி பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செல்வி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×