search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நித்திரவிளை அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
    X

    நித்திரவிளை அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

    • காரணம் என்ன? போலீசார் விசாரணை
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை :

    கொல்லங்கோடு அருகே உள்ள அம்மந்தலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவரது மகன் ரெஜின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் நித்திரவிளை அருகே கொல்லால் புன்னமடை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள பாறை குளத்தில் ரெஜின்ராஜ் வளர்ப்பு மீன்கள் வளர்த்து வந்தார். இந்த குளத்தை சுற்றி கம்பியால் ஆன வேலியும், மேல் பகுதியில் வலையும் போட்டுள்ளார்.

    இன்று காலை தேவராஜ், மீன்களுக்கு தீனி போட சென்றார். அப்போது குளத்தில் சுமார் 200-க்கும் அதிகமான மீன்கள் செத்து மிதந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் விஷ உணவுகளை வீசியதில் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×