search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 42 வாகனங்கள் ஏலம்
    X

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 42 வாகனங்கள் ஏலம்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் நடந்தது
    • போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுத்தனர். 35 மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 42 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மதியழகன், சுப்பையா மற்றும் டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், உதயசூரியன், சந்திரசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    Next Story
    ×