search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லுண்ணி கோணம் அரசு பள்ளியில் ஆண்டு விழா
    X

    வில்லுண்ணி கோணம் அரசு பள்ளியில் ஆண்டு விழா

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார்.
    • மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மார்த்தாண்டம் :

    வில்லுண்ணிக்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 44-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவகலா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சேம் பிரின்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார். திருவட்டார் யூனியன் சேர்மன் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனு, முன்னாள் மாணவர் சோழராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.சிந்து குமார் பரிசு வழங்கினார்.தமிழ் ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியை லிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×