என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.
    • மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 76). இவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரம் சுடுகாடு பக்கம் உள்ள நாஞ்சில் நாடு புத்தன் ஆற்றில் ஆகாயத் தாமரை செடி, கொடி களுக்கு இடையே பிணம் ஒன்று மிதந்து கொண்டி ருந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.

    ஆற்றில் மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு ஓடியதால் அந்த பிணத்தை மீட்க முடியவில்லை. உடனே இதுபற்றி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். அப்போதுதான் ஆற்றில் பிணமாக மிதந்தது கொட்டா ரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள் ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்றில் பிணமாக மிதந்த மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    • கோழிப்போர்விளையில் 132 மி.மீ. பதிவு
    • பேச்சிப்பாறை, சிற்றாரில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய மழை பெய்தது. இதையடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டார்.

    தக்கலை கோழிப் ேபார்விளை பகுதியில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் கார ணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 132 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களியக்காவிளை, மார்த்தாண்டம், பேச்சிப்பா றை, கொட்டா ரம், மயிலாடி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலையோர கிராமங்களி லும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மலை யோர பகுதிகளில் உள்ள ரோடுகளை மூழ்க டித்து காட்டாற்று வெள்ளம் செல் கிறது. சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள னர். பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதை யாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரைக்கு செல்லக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிப் பதற்கான தடை நீடிக்கப்பட் டுள்ளது. 4-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற் றம் அடைந்து உள்ளனர். நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது கன மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழையின் காரணமாக நாகர்கோவில் உள்ள சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினார்கள். தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் கோட்டார், வடசேரி பகுதிகளில் சாக்கடை நீர் நிரம்பி மழை நீருடன் ரோட்டில் சென்றது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக இருந்தது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியா கவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.41 அடியாக உள்ளது. அணைக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 480 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உயர்ந் துள்ளது. அணைக்கு 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும், 500 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாக உள்ளது. மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளி யேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளள வான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 25 நாட்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 47, பெருஞ்சாணி 46.2, சிற்றாறு 1 -67.2, சிற்றாறு 2 87.6, பூதப்பாண்டி 60.6, களியல் 50, கன்னிமார் 42.4, கொட் டாரம் 48.4, குழித்துறை 41, மயிலாடி 62.4, நாகர்கோவில் 63.6, புத்தன் அணை 42.8, சுருளோடு 58.6, தக்கலை 122.4, குளச்சல் 18.6, இரணியல் 34.2, பாலமோர் 22.4, மாம்பழத்துறையாறு 6.4, திற்பரப்பு 53.8, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப்போர்விளை 132, அடையாமடை 63, குருந் தன்கோடு 66.2, முள் ளங்கினாவிளை 6,7 ஆணைக்கிடங்கு 95.4, முக்க டல் 47.2.

    • 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது. நான் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பின் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது.

    இந்த பணிகளுக்காக கூடுதலாக 1041 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


    கடுமையான முயற்சிகளின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

    தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகிறது.

    அப்போது இந்த பணிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பணிக்கான திட்ட இயக்குனர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்காரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கான அனுமதியை பெற்று தந்தோம். ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து இந்த பணிகளுக்காக மண் கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர். பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என துறை அதிகாரிகளுக்கு உறுதியளித்தார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் மாநக ராட்சி 17-வது வார்டுக் குட்பட்ட நெசவாளர் காலனி குறுக்கு தெருக்களில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள அலங்கார தரைகற்கள் மறுசீரமைக்கும் பணி,

    46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி, வி.ஐ.பி. கார்டன் மெயின் ரோட்டில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    28-வது வார்டுக்குட்பட்ட சவேரியார் கோவில் பின்பு றம் உள்ள தெருக்களில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, வீரசூரபெருமாள், ரமேஷ், அனந்த லெட்சுமி, மாநகர துணைச்செயலாளர் ராஜன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, துரை, அணிகளின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், பீட்டர் வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், பெரி, முருகன், முத்து கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ்பெற்ற பூ சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், ஆவரைகுளம், பழவூர் ஆகிய ஊரிலிருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், நெல்லை மாவட்டம் திருக்கண்ணங்குடி, அம்பாச முத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊரிலிருந்து பச்சை துளசியும், தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படு கிறது.

    இதே பனிப்பொழிவு நீடிக்கும் என்றால் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.

    • கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி குழுமத் தின் சேர்மன் பொன் ராபர்ட் சிங் அறிவுறுத்த லின்படி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பொன்ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்பு கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் அருள்சன் டேனியல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஐசக் சாஜன், பொன் ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வாசு ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சிறப்பு ரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் கோமதி பங்கேற்று யோகா பயிற்சியின் விளக்க உரை யும், செய்முறையையும் மாணவர்களுக்கு வழங்கி னார்.

    இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட கூடைப்பந் தாட்ட கழக செயலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது

    தென்தாமரைகுளம் :

    கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் 38 சதவீத மும், தமிழ்நாட்டில் 14 சதவீதம் நில ஆர்ஜி தம் முடிந்துள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று (21-ந் தேதி) மாலை. 4.30 மணி அடைக்ககப்பட்டது இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப் பட்டு இருக்கும்.

    எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லு மாறு அங்கு வைக்கப் பட்டுள்ள அறி விப்பு பலகையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வேகேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.

    இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழி யாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக கன்னியாகுமரி மற்றும் கல்லூரி, பள்ளி களுக்கு செல்லும் வாக னங்கள், இருசக்கர வாக னங்கள் மாற்று வழியாக. அகஸ்தீஸ்வரம், மாடு கட்டிவிளை சரவணன் தேரி, சுக்குப்பாறைதேரிவிளை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்களும், கன்னியா குமரிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி குள்ளாகியுள்ளனர். 

    • சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
    • ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்

    நாகர்கோவில், நவ. 22-

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    • பதட்டம் நிலவியதால் போலீசார் விரைந்தனர்
    • தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் பகுதியில் பம்மத்திலிருந்து வெட்டுமணி வரை 2¾ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் பொது மக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது.

    இதில் பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக பல பகுதிகளில் படிக்கட்டு களும் அமைக்கப்ப ட்டுள்ளது. இதில் உயர்வாக காணப்படும் பகுதிகளில் சில கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களுக்கு வசதியாக கடைகளில் இருந்து நடைபாதைக்கு செல்லும் வழியின் மேற்பகுதிகளில் சீட்டுகளை அமைத்து கடையாக மாற்றி உள்ளனர். மேலும் சாலையிலிருந்து கடைக்கு செல்ல நடை பாதையை உடைத்து, தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காந்தி மைதானத்தை தொட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு படி அமைக்க முயன்றனர். அவர்கள் கனரக வாகனம் மூலம் நடைபாதையை உடைத்தனர். மேலும் நடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கிரில்களையும் உடைத்து எடுத்துள்ளனர்,

    இதை கேள்விப்பட்ட பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு, குழித்துறை நகர பா.ஜ.க. தலைவர் சுமன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், உமேஷ் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு போராட்டமும் நடத்தினர்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடைபாதையை இடிக்க பயன்படுத்திய கனரக எந்திர வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திரண்டு இருந்த மீனவர்க ளுக்கும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
    • மாவட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வா கிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்து றையில் அமைந்துஉள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் அகில உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை லிகோரியஸ் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழகசெயலா ளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மீனவர்களுடன் கேக் வெட்டி உலக மீனவர் தின விழாவை கொண்டாடி னார். பின்னர் அங்கு திரண்டு இருந்த மீனவர்க ளுக்கும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள், மாவட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வா கிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார்

    நாகர்கோவில், நவ.22-

    குமரி மாவட்டத்தில் கடற் கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை தி.மு.க. அரசு செய்ததாக இனயம் புத்தன்துறையில் நடந்த மீனவர் தின விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறையில் மீனவர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கனிமொழிஎம்.பி., கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடலில் மட்டுமல்ல போராட்டம், வாழ்க்கை நடத்தும் கடற்கரையிலும் இயற்கையினால் ஏற்படும் போராட்டங்களை விவரித்தனர். இதை அறிந்து தான் தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார். இங்கு பேசும் போது தமிழக சட்டமன்றத்தில் மீனவர்க ளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றனர். கருணாநிதி அரசில் முதல் மீன்வளத்துறை அமைச்சர் சென்னை மீனவர் கே.பி.பி.சாமி தற்போது அவரது சகோதரர் கே.பி.பி. சங்கர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மீன்வளத்துறை மட்டுமின்றி தமிழகத்தின் மிக முக்கிய துறையான சுகாதார துறையின் தற்போதைய அமைச்சர் ஒரு மீனவர் என்பதை கூறிக் கொள்கிறேன். இங்கு முக்கிய பிரச்சனையாக மீனவர்களை பழங்குடியி னர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து உள்ளனர். வரும் நாடாளு மன்ற தேர்தலில் மத்தியில் ஒரு மாற்றம் வரும். மாற்றம் வந்தால் மீனவர் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு என ராமநாதபுரத்தில் தனி மாநாடு நடத்தியவர் ஸ்டாலின், மீன்வள கல்லூ ரிகளில் மீனவ மாண வர்களுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கியதும் தி.மு.க., அரசு தான். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்தது தி.மு.க., அரசு. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத் தில், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்கு மார், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணி

    திருவட்டார் :

    இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சிற்றாறு பகுதியில் இந்தியா மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை சார்பில் குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட்சிங் தலைமையில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணியும், அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இதில் உணவு, யோக பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான உடல், மனம், ஆன்மா போன்ற சாராம்சங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. நோய் நிலையில் கடைபிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×