என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் “மகா தீபம்” ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான வருகிற 26-ந்தேதி கார்த்தி கை தீபத்திருவிழா கொண் டாடப்பட உள்ளது.

    இதை யொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியா குமரி அருகே பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்து உள்ள குமரியின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில் களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 26-ந் தேதி காலை பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கமும், அன்னதானமும் நடக்கிறது. மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும். 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண் கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திரு விழாவை கொண்டாடு வார்கள். வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கி றது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் நடந்தது
    • போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுத்தனர். 35 மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 42 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மதியழகன், சுப்பையா மற்றும் டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், உதயசூரியன், சந்திரசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    • காரணம் என்ன? போலீசார் விசாரணை
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை :

    கொல்லங்கோடு அருகே உள்ள அம்மந்தலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவரது மகன் ரெஜின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் நித்திரவிளை அருகே கொல்லால் புன்னமடை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள பாறை குளத்தில் ரெஜின்ராஜ் வளர்ப்பு மீன்கள் வளர்த்து வந்தார். இந்த குளத்தை சுற்றி கம்பியால் ஆன வேலியும், மேல் பகுதியில் வலையும் போட்டுள்ளார்.

    இன்று காலை தேவராஜ், மீன்களுக்கு தீனி போட சென்றார். அப்போது குளத்தில் சுமார் 200-க்கும் அதிகமான மீன்கள் செத்து மிதந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் விஷ உணவுகளை வீசியதில் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மீனவ பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து வாவத்துறை பகுதியில் பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    மீனவ மக்களின் அந்த கோரிக்கையை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்று கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து வாவத்துறை பகுதியில் ரூ..10லட்சம்செலவில் மீனவ மழலை குழந்தைகளின் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா உலக மீனவர் தினமான இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்று அகில உலக மீனவர் தினம்என்பதால் மீனவ மக்களுக்கு எனது உலக மீனவர் தின வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர் நலன் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. சுனாமி ஏற்பட்ட நேரத்தில் மட்டுமின்றி கொரோனா காலத்திலும்மீனவ மக்களுக்காக எனது சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு வாழ்வாதா ரத்தையும் அளித்துஉள்ளோம்.மீனவ மக்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்வதற்காக கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். ஓமன் நாட்டில் தவிக்கும் கோவளம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். விரைவில் அந்த மீனவர்கள் பாதுகாப்பாக ஊர்திரும்ப வேண்டும் என்று உலக மீனவர்தினமான இன்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

    அதன்பிறகு அங்கன்வாடி புதிய கட்டடத்தில்தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உலக மீனவர்தினத்தையொட்டி கேக் வெட்டி அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்பு பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாவத்துறை பங்குத்தந்தை லிகோரியஸ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆசிர்வதித்து ஜெபம்செய்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம்வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம்ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆடலின் சேகர், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், குமார், எழிலன், சிவபாலன், மணிகண்டன், டாக்டர் தேவசுதன், லீபுரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் லீன், அ.தி.மு.க. நிர்வாகிகள் நசரேத் பசலியான், சுகுமாரன் டாஸ்மாக் மணிகண்டன், சந்துரு என்று ஜெயச்சந்திரன், கிருஷ்ண தாஸ், அக்க்ஷயா கண்ணன், வக்கீல் ஜெயகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு ஊராளிவிளையை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 48), கட்டிட தொழிலாளி. சம்பத்தன்று வீட்டின் அருகாமையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த வினோலின் (36), அனல் ஜெகலின் றோஸ் (37) ஆகியோர் கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவரது தாயார் கனகம்மாள் (70), தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் கம்பியால் தாக்கியதால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல மறுதரப்பில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த பிறிகேஸ் வினோலின் (26), அவ்வழியே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாந்தப்பன் (46), ஜான்சன் (55) ஆகியோர் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம், நவ.21-

    ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீனிவாசனை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஸ்ரீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
    • பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 46). பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பணத்தை பாக்கெட்டில் வைத்த அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு வைத்து பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நெய்யூர் முரசன்கோடு பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விஜின் (20) கல்லூரி தேர்வு எழுதிவிட்டு அரசு பேருந்தில் வந்து இரணியல் கோர்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது கீழே ரூ.5 ஆயிரம் கிடப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து போலீஸ் நிலையத்தில் பணத்தை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்றுவிட்டார்.

    இதனிடையே நேற்று காலை பணத்தை இழந்த ராஜேஷ்குமார் இரணியல் போலீஸ் நிலையம் வந்தார். உரிய விசாரணைக்குப்பின், அவரிடம் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் முன்னிலையில் விஜின் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விஜினுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
    • பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான்.

    மணவாளக்குறிச்சி :

    குமரி மாவட்டம் மண்டைக்காடுஅருகே உள்ள கூட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணிணி பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் அஷ்வந்த் (வயது 9). இவன் அந்தப்பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் டியூசன் வகுப்புக்கும் சென்று வந்தான்.

    நேற்று மாலை அஷ்வந்த், பள்ளியில் இருந்து வழக்கம்போல் வீடு திரும்பினான். பின்னர் அவன் பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான். பஸ் நிலையம் பகுதிக்கு அஷ்வந்த் வந்த போது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

    அவர்கள் நைசாக அஷ்வந்திடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது பஸ் நிலைய பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்தி 2 பேரும் திடீரென, அஷ்வந்த்தை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்றனர். இதனை எதிர்பார்க்காத அவன், அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றான். உடனே 2 பேரும் அஷ்வந்த் வாயில் துணியை (கர்சீப்) வைத்து அழுத்தி உள்ளனர்.

    அந்த நேரத்தில் ஊர் மக்கள் அங்கு வந்ததால், மோட்டார் சைக்கிள் நபர்கள், அஷ்வந்தை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். டியூசன் சென்ற மாணவனை கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்வந்த்தை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றனர்? முன்விரோத செயலா? அல்லது பணம் பறிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
    • தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் திறந்தார்

    திருவட்டார் :

    குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. திருவட்டாரை மையமாக வைத்து புதியதாக திருவட்டார் தாலுகா உதயமானது.

    இதனையடுத்து திருவட்டாரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டார் தாலுகா அலுவலகத்துக்கு சொந்தமாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தார். திருவட்டார் தாலுகாவின் மைய பகுதியான குலசேகரம், செருப்பாலூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ப்பட்டது.

    இங்கு கட்டிடம் கட்ட ரூ.3.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். அதோடு அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர், நுளைவு வாயில், தாலுகா குடியிருப்பு அமைக்க கூடுதலாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அலுவலக கட்டிடப்பணி கடந்த ஜனவரி மாதம் நிறை வடைந்தது.

    இதனையடுத்து புதிய அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி அலுவலக செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். தாசில்தார் முருகன் வரவேற்றார். திருவட்டார் தாலுகாவின் முதல் தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் ஜெயந்தி ஜேம்ஸ், ஜோஸ் எட்வர்ட், பெனிலா ரமேஷ், அகஸ்டின், சுஜிர் ஜெபசிங்குமார், பொன்ரவி, பால்சன், கெப்சிபாய் றூஸ், விமலா சுரேஷ், லில்லிபாய் சாந்தப்பன், ரெஜினி விஜிலா பாய், தங்கவேல், தேவதாஸ், ஸ்டாலின்தாஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் எட்வின் ஜோஸ், ஜெயமாலினி, விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தாலுகா அலுவலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று குத்து விளக்கு ஏற்றினார்.

    பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்களின் நலன் கருதி கிள்ளியூர் தனி வருவாய் வட்டமாகவும், திருவட்டார் தனி வருவாய் வட்டமாகவும் உருவாக்க வேண்டும் என சட்டசபையில் பேசியதோடு, அப்போதைய முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்ததன் விளைவாக எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொலையாவட்டத்தில் கால்நடை துறைக்கு சொந்தமான ஒரு பழைய அரசு கட்டிடத்தில் தற்காலிக அலுவலகமாக கிள்ளியூர் தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தை முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிரிஸ்டல் ரமணிபாய், கொல்லங்கோடு நகராட்சி தலைவி ராணி ஸ்டீபன், கிள்ளியூர் பேரூராட்சி தலைவி ஷீலா சத்யராஜ், கீழ்குளம் பேரூராட்சி தலைவி சரளா கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு


    தக்கலை, நவ.21-

    தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.

    போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.
    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே ஈஞ்சவிளை, செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு ஜெயா (50) என்ற மனைவி யும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண் டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜேந்திரன் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மது அருந்தி வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். இவரது மனைவி ஜெயா பார்த்தபோது வாயில் இருந்து நுறை தள்ளியபடி இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

    டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது ராஜேந்திரன் ஏற்கனவே விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. ஜெயா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பகவதி அம்மனை தரிசிக்கும் அவலம்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொ டங்கிய நிலையில் ஏராள மான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகு திக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்து களைப்பில் வரும் அய்யப்ப பக்தர்கள், வயதான, ஊனமுற்ற பக்தர்கள் பலர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் கட்டிவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடுதலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது. இதற்காக ஒரு நபர் சுமார் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

    இதுவரை காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தி வந்த சிலுவை நகர் பார்க்கிங்கில் அனைத்து வாகனங்களையும் அனுப்பும் நடைமுறை அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×