search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா
    X

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா

    • மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது

    நாகர்கோவில் :

    கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நாளை (24-ந்தேதி) பேராலய 11 நாள் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. நாளை காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகு விளை பங்கு இறை மக்களும் நிறைவேற்று கிறார்கள். மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.

    3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறு கிறது. 9-ம் நாள் திருவிழா வான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலை மையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற் கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர யும் நடக் கிறது.

    8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசி யார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகி யோரின் திருப்பண் பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொ டர்ந்து அன்பின் விருந்து நடக்கிறது.

    திருவிழா எற்பாடுகளை பங்கு தந்தை பஸ்காலிஸ், உதவி பங்கு தந்தை ஜெனிஷ் கவின், கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொரு ளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×