search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி
    X

    சிற்றாறில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணி

    திருவட்டார் :

    இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சிற்றாறு பகுதியில் இந்தியா மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை சார்பில் குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட்சிங் தலைமையில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணியும், அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இதில் உணவு, யோக பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான உடல், மனம், ஆன்மா போன்ற சாராம்சங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. நோய் நிலையில் கடைபிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×