என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
    • கலவரம் நடந்த பகுதிக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

    மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் பள்ளியின் பஸ்கள், போலீஸ் ஜீப்கள் எரிக்கப்பட்டன. நிலைமை தொடர்ந்து மோசமாகவே போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டகாரர்கள் சிதறி ஓடினார்கள். அப்போதும் கலவரம் ஓயவில்லை.

    உடனடியாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    இதன் விளைவாக கைது படலம் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 14 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 350 பேரும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதனை விசாரித்த நீதிபதிகள் 350 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இவர்களில் 22 பேர் சிறார்கள் ஆவர். சிறார்களை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையானது.
    • இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது, கைது நடவடிக்கை தொடரும்.

    சின்னச்சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    அந்த பள்ளியில் இன்று தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தீக்கிறையான பள்ளி அறைகள் மற்றும் அலுவல அறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:

    மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர்.

    தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

    சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது.

    வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது. கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா நடைபெற்றது.
    • தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்க முழுவதும் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது/ இதை முன்னிட்டு பாண்டூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். இதுபோல் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது. இதில் முன்னாள் நிர்வாகிகள் பாண்டுர் பாண்டியன், மணிராஜ், ஜெயக்குமார், பாலாஜி, கோவிந்தராஜ், அறிவழகன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், கார்த்திக், தனபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
    • பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

    இந்த இறப்பிற்கு நீதிகேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலித்தது. நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்டக்களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    • சின்னசேலம் வன்முறை சம்பவம் எதிரொலி போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
    • கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி–கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலி–த்தது. நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்ட காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்ட களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கி–சூடு நடத்தினர்.

    ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்தி–ர–பாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட–தாக 329 பேர் கைது செய் யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவல–கத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்க–வேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்

    • கள்ளக்குறிச்சியில் மக்கள் நல அமைப்பு செயலாளர் திடீர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்ட காரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர். என்றாலும் போராட்டம் ஓயவில்லை. நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது.

    இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர்.
    • பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர்.

    என்றாலும் போராட்டம் ஓயவில்லை. நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது.

    இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சின்னசேலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரிய நெசலூர் கிரா–மத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13- ந் தேதி–அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடி–யில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும்.

    பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்ற வேண்டும், மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கனியாமூரில் சக்தி மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர். அப்போது பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிர்ந்த 17 பஸ், 4 டிராக்டர், 1 ஜே.சி.பி. மற்றும் 1 போலீஸ் வாகனம் உள்ளிட்ட 23 வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மேலும் அங்கே நிறுத்தி வைத்திருந்த போலீசாரின் 29 மோட்டார் சைக்கிள் மற்றும் செய்தி–யாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 30 மோட்டார் சைக்கிள் களுக்கும் தீ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை முழுவதுமாக அடித்து நொறுக்கி வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றையும் தீ வைத்த–னர். இதில் சுமார் 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னசேலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இவர் கடந்த 13-ந்தேதி பள்ளி விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.

    பதறிபோன ஸ்ரீமதியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். தங்களது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சின்னசேலம் போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராட்டம் செய்தனர்.

    இதற்கிடையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவி ஸ்ரீமதி உயிரிழக்கும் முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை-கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதிஅளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையில் மாணவியின் மர்மமரணம் விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று காலை மாணவியின் உறவினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கனியாமூரில் உள்ள பள்ளி முன்பு திரண்டனர். திடீரென்று அவர்கள் பள்ளிக்குள் புகுந்தனர். அப்போது போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அதனையும் மீறி போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் செல்ல முயற்சித்ததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சேலம் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உள்பட 67 போலீசார் காயம் அடைந்தனர்.

    என்றாலும் போராட்டம் தணியவில்லை. நேரம் செல்ல செல்ல கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த பள்ளி பஸ்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதில் 15 பஸ்கள், 4 டிராக்டர்கள், 3 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன.

    இதையடுத்து பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரின் வஜ்ரா வாகனத்தையும் கலவரக்கும்பல் சேதப்படுத்தியது.

    எனினும் நிலைமை மோசமானதால் போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலவரக் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 3 மணிக்கு பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

    தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சின்னசேலம் விரைந்தார்.

    அப்போது அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    எனினும் சட்டம்-ஒழுங்கை கருதி சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பள்ளி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.ஜி.பி.யின் அதிரடி நடவடிக்கையால் பள்ளி தாளாளர் ரவிக்குமார் (48), பள்ளி செயலாளர் சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன் (57) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி வேதியியல் ஆசிரியர் ஹரிபிரியா (40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது சந்தேக மரணம் 177 (ஐ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களில் 108 பேர் இன்று கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நேற்று கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் வாகனம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் 108 பேர் இன்று கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை போலீசார் 4 வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். மீதமுள்ளவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    • கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 192 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • வரும் 31-ம் தேதி வரை கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது.

    போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அதன்பின், பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.

    இதைத் தொடர்ந்து, அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 192 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×