என் மலர்
காஞ்சிபுரம்
- ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
- சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போரூர்:
சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது 37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி.
இவர் தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலை.
- வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், மனபுரம், பொடவூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 4563 ஏக்கர் இடம் விமான நிலையத்தை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ளது.
இதில் காலம் காலமாக மக்கள் வசித்து வரும் வீடுகளும், அவர்கள் விவசாயம் செய்து வரும் விளை நிலங்களும் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கு தண்ணீர் வழங்கி வரும் ஏரிகள் ஆகியவையும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் மற்றும் பூர்வீக இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, நிலங்களை எடுக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இந்த பகுதி முழுவதுமே கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலையில் உள்ளனர். இதற்கிடையே விமான நிலைய பணிகளுக்கு அப்பகுதியில் உள்ள 1005 வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விமான நிலைய வரவால் வீடுகளை இழக்கும் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை தமிழக அரசே கட்டி கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோன்று நிலங்களை கையகப்படுத்தும்போது பாதிக்கப்பட உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலத்தின் சந்தை மதிப்பை விட 350 சதவீதம் அளவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் இழப்பீட்டு தொகையுடன் அரசு வேலை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற அப்பகுதி மக்களின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
- சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.
- பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன் (வயது 25). பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார். இவரிடம் வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி (24) என்பவர், கடந்தாண்டு அறிமுகமானார். அப்போது அவர், தான் பட்டய கணக்காளர் படிப்பு முடித்துவிட்டு பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்து வருவதாக கூறினார்.
மேலும் சர்வபொம்மனிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பிய சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இது குறித்து சர்வபொம்மன் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
அதில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று விசாரித்ததில் அங்குள்ள நிறுவனத்தில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும், நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருப்பதும் தெரிந்தது.
கேரளா சென்றிருந்த அவர் பெங்களூரு திரும்பும் வழியில் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு வைத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் 3 பேரையும் சேலையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி இதுபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சர்வபொம்மன் உள்பட பலரிடம் ரூ.15 முதல் ரூ.20 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜியை நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.
- குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா.
- போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா (வயது 40). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி பஷீரா (35), அவர்களது மகன் முகமது அமீர் (20). நசீர் பாட்ஷா. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நசீர்பாட்ஷா தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக அவரது மகன் தகவல் தெரிவித்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது மகனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகனை நசீர்பாட்ஷா உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் கட்டையை பறித்து திருப்பி தாக்கியதில் தந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன்.
- சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி.
சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை பிடித்தபடி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த எல்லப்பன் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்து போன எல்லப்பன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வாய்க்கால் நீர் நிலை பகுதியில் 64 வீடுகள் கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற அதிகாரிகள் சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு சில மாதங்களுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடித்து அகற்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., குன்றத்தூர் தாசில்தார், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். இதன் தொடர்ந்து 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் இடிக்கப்படாமல் இருந்த 10 வீடுகளை நேற்று இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், கண்ணன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சம்பத். தி.மு.க. பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பத்திடம் தொலைபேசியில் பேசிய மர்மநபர் தான் மத்திய உளவுத்துறை போலீஸ் எனவும் நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்து உள்ளது.
நீங்கள் வருமானத்துக்கு கணக்கு கட்டாமல் உள்ளதால் உங்கள் மீது வழக்கு போட்டு உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை ஜப்தி செய்து விடுவோம். நடவடிக்கை எடுக்காமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன சம்பத் ரூ. 7 லட்சத்தை தனது டிரைவரிடம் கொடுத்து அனுப்பினார். அதனை பெற்றுக்கொண்ட மர்ம நபர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சம்பத் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார்.
- டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பெருநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சோமு என்கிற சோமசுந்தரம்.
இவர் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவில் தலைமை தலைவராக இருந்தபோதே 'திக் திக் டாக்' என்ற செல்போன் செயலில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமான தாயார் குளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களது நட்பு தொடர்ந்து வந்தது.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை தேடி பெருநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மேலும் அவர் அங்கிருந்த போலீசார் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் உரிமையுடன் பேசி கடும் வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் போலீஸ் நிலையத்திலேயே டிக்டாக் காதலியை சரமாரியாக தாக்கினார்.
மேலும் அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கும் 'பளார்' அறை விழுந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் காட்சியை போலீஸ் நிலையத்தில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் நடைபெற்றபோது டிக்டாக் காதலி தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் டிக்டாக் காதலியை தாக்கி செல்பேனை பறித்து உள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த காதலி, செல்போனை கொடுக்கவில்லை என்றால் ஆடையை கழற்றி போட்டு போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் செல்போனை திருப்பி கொடுத்து உள்ளார்.
இதேபோல் டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த டிக்டாக் காதலி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் காதலியின் தம்பி ஒருவரை வழக்கு ஒன்றில் போலீசில் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்துடன் உள்ள தொடர்பு குறித்து அவரது மனைவி மற்றும் மாமனிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்துக்குள் வந்த மீண்டும் தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்திற்குள் வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்ட காதலியை வசமாக கவனித்து அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
- கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்விடத்தையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற போராடி வரும் 12 கிராம மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் ஏகனாபுரம் கிராமத்துக்கு சென்றார்.
முன்னதாக அங்குள்ள காலி இடத்தில் கிராம மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக குவிந்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகள் வைத்து இருந்தனர்.
கிராம மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். அப்போது விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கிராம மக்கள் கண்ணீருடன் நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதே போல் பரந்தூரை சுற்றி உள்ள மற்ற கிராமங்களுக்கும் சீமான் சென்று அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் சால்டின், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற செயலாளர் ஈ.ரா. மகேந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற பொறுப்பாளர் வக்கீல் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, நாகநாதன், ஆனந்தன், சந்திர சேகர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகி காசிம் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மோக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
நீர் நிலைகள் மாசடைவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள (சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை) போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.
- அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.
இதற்காக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப் படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கு அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று கிராம மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதுத்தொடர்பாக ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றியும், பேரணியாகவும் சென்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 15 நாட்களுக்கு பொதுக் கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் நாட்களில் விழாக்கள் வர உள்ளதால் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயங்களில் மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் சட்டம் 30 (2) அமல்படுத்தப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பொதுக் கூட்டம் நடத்துபவர்களும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பாமக சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.






